Wednesday, October 17, 2007

நண்பி.....

நண்பி.....
நண்பி.........
நட்பு....
சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு
உன்னை காணும் வரை
ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே
அன்பு காட்டும் உலகில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன்
அன்பை எண்ணி வியந்து போகிறேன்....

நண்பி.........
மொழிகளோ....
தூரங்களோ........
வயதோ.......
மற்ற எதுவுமே - நட்பை
எதிர் பார்ப்பதில்லை...
உன்னாலே புரிந்து கொண்டேன்..
என் வாழ்க்கைத் தோட்டத்தில்
எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால்
உன் நட்பைப்போல் எதுவும்
மலர்ந்து மணம் வீசவில்லை
கால வெள்ளத்தில்
சிதறுண்டு போகும் உறவுகளில்
நண்பி.............தொடர்வாயா
உன் நட்பை
இறுதி வரை..........?

Thursday, September 6, 2007

Wednesday, September 5, 2007

தமிழா...

தமிழச்சியிடம்
தாய்ப்பால் பருகிப் பருகி
நிமிர்ந்த உன் முதுகெலும்பை
தாய் மொழிக்கன்றி
வேறெதற்கும் வளைக்கலாமோ
...
தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்
தமிழ்ப் பற்று போனவனோ
தன் தலையற்றுப் போனவனன்றோ
...
நம்
மூச்சிலும் காற்றிலும்
கன்னித்தமிழ் மணம்
என்றும் வீசுதல் வேண்டாமோ

நம்
இரத்தக் குழாய்களிலும்
சுத்தத் தமிழெழுத்துகள்
வற்றாது ஓடுதல் கூடாதோ
.....
வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா

நட்பு...

காதல்
கண்ணீரை
வர வைக்கும்
இனிய உணர்வு...

நட்பு
வரும் கண்ணீரைத்
துடைக்கும்
அழகிய உறவு

101 reasons wat makes u a gr8 frnd:

1. i can't spell frndship without u

2. ur da most beautiful flower in da garden of my life

3. you can easily tell a lie for my convenience

4. you understand when i'm too buzy

5. you know me better than my siblings

6. u don't necessarly support my decisions

7. u go an extra mile when i need help

8. u tolerate my bad moods and still speak 2 me wen ur in 1

9. at others expense, u make a gr8 laughing partner

10. u walk in wen oders walk out

11. i can speak my heart out to u

12. u openly discuss a disaterous date/crush

13. u fall 4 da same junk as i do

14. u help me to chose the right think 4 my heartthrob

15. i can throw my tantrums on

16. i can rely on u 2 post my letters

17. i know i needn't luk my best wen ur around

18. i can discuss my crepy fantasies with u

19. u motivate me 2 execis

20. u've got sense of humour

21. u hand me ur handkerchief wen i've conveniently 4gotten min

22. u bluntly tell me wen i need 2 spray a deo or mouth freshner

23. i can freely discuss my ex's nd my latest crush

24. i can tok 2 u 4 hours abt anything nd nothin

25. i can tuck in 4 a blockbuster night

26. u know my secret wishes and keep them a secret

27. u know how to give me lil surprises 2 make my day

28. u keep me well informed abt latest gossips

29. u let me know,wen i need to mend my way

30. ur a reminder of wats important in lif

31. i can freely discuss censored topics wit

32. u always welcome me with a warm hug

33. even if we're not in touch 4 ages, i know ur dere for me

34. u flatter me wen i need 2

35. u never burn a hole in my pocket

36. shopping is fun. u always manage a good bargain

37. u understand my moods very well

38. you answer my phone,wen i'm avoiding a call

39. u never let ego cum btwn us

40. ur dere for me , wen i'm feelin down

41. going out with u doesn't need a reason or occasion

42. time simply flies by wenever we're together

43. i can b very comfy wid u

44. u help me solve my problems

45. u keep a check on me wen i'm at my spendin spree

46. u can sit uietly wid me

47. u care 4 my happiness

48. u equally participate wid me on playin a prank

49. u don't take me 4 granted

50. u get worried wen i'm not well

51. u read me lik a buk

52. ur always soooo right

53. wenever i'm wrong u never make it worse by sayin "i told u so"

54. i can b funny nd get away without makin a fool of my self

55. u've got a gr8 sporting spirit

56. u make me laugh

57. u celebrate my triumphs

58. u help me overcum my shortcummins

59. ur selfless nd giving

60. without feelin hesitant i can borrow ur books, dress, etc..etc..etc.....

61. u bring sunshine into my life

62. u never gossip abt me

63. u know how to pamper me

64. u know were to find the best pair of jeans on the cheap

65. u never dump me for sum1 else

66. u know how 2 make me stop wen,i'm tokin sheer nonsense

67. u consider my feelins too

68. i can call u any itme of da day without feelin hesitant

69. u point out wen i'm lukin lika an idiot

70. u know exactly wat to get for my birthday

71. coackroaches don't scare the hell out of u

72. u don't loose ur cool as often as i do

73. u so much believe in sharing, from secrets to candies

74. u know the best eating joint

75. u neva shout along with mewen i'm shouting at my throats best

76. u immediately apologise after harshly giving me a piece of ur mind

77. u are never afraid to accept ur faults

78. u respect my privacy

79. u never demand a clsrification

80. u always save the last bite of delecious 4 me

81. ur shoulders are everready for me to lean on

82. u alarm me wen i've gained too much weigth

83. u light up my life

84. u patiently listen to all my troubles

85. bcauze u bring infinite joys 2 me

86. ur as sweet as can b

87. u accept me the way i am

88. each time i think of u, i smile

89. u know how to emotionally black mail me

90. i can trust on ur advice

91. ur a true reflection of me

92. i can ask u uestions lik "am i lukin good" no of times nd i knoiw u won't get irratated

93. NO ONE CAN EVER TAKE UR PLACE

94. u've seen me at my worst and still stood by me

95. u have more faith in me dan i do in myself

96. u will never change nomatter wat happens tomorrow

97. u make me wish, we were in the same family

98. u know wento make things light

99. u never laugh at my faults

100. u bring out the best in me

101. and the greatest reason is that, you are simply "YOU"

Monday, September 3, 2007

காதலி..

மதங்களை காதலி


தீவிரவாதியாகதே!


ஜாதியைக் காதலி (ஆண், பெண்)


வெறிக் கொள்ளாதே!


நிறத்தைக் காதலி - அதில்


உயர்வுத் தாழ்வு காணாதே!


மண்ணைக் காதலி - அதற்காக


உறவைப் பகைக்கொள்ளாதே!


நாட்டைக் காதலி - நாட்டை


இழி நிலைக்குத் தள்ளாதே!


இயற்கையைக் காதலி - அதை


அழிக்க நினைக்காதே!


தாயைக் காதலி


காரியவாதி யாகாதே!


தந்தையைக் காதலி


பணப்பையை பார்க்காதே!


உடன்பிறப்பைக் காதலி - அவர்களால்


ஏற்படும் தீமையை நினைவில் கொள்ளாதே!


பணத்தைக் காதலி - அதுவே


வாழ்க்கை எனக் கொள்ளாதே!


மனதைக் காதலி


வெளி அழகைப் பார்க்காதே!


நல்லதைக் காதலி


தீயதை அணுகவிடாதே!


காதலை காதலி


கைவிட்டுவிடாதே!

Saturday, September 1, 2007

தோழமை.

சில கவிதையின்


கடைசிவரியில்


ஒட்டியிருக்கும்


உயிரைப்போல


எதை எதையோ


பிதற்றிய


உன் கடிதத்தின்


இறுதிவரிசொன்னது


என்னை- நீ


நேசிப்பதாய்!




கடிதம் எழுதக்கூட


வார்த்தை


கடன் வாங்கியிருந்தாயா?


எந்தச் சொல்லிலும்


உன்


சொந்த உணர்வுகளில்லை.




பூக்களுக்கு


முலாம் பூசுவதுமாதிரி


இதயத்தில்


பொறுந்தவேயில்லையடா


உன் கடிதம்.




எப்போதுமே


மதிக்கிறேன்


உன் அறிவுத் திறமையை




எப்போதும்


கடமைப்பட்டிருக்கிறேன்


நீ செய்த உதவிகளுக்கு.




நீ


என்னைச் செதுக்கினாய்


அந்த உரசலில்


ஒருபோதும்


என்னுள்


தீ மூண்டதில்லை.




தெரிந்துகொள் தோழனே


இது தோழமை.




ஆத்மாவை


அலங்கரித்துக் கொடுத்த


உன்னோடு


உடை களையும் உறவு


கொச்சையாகும்.




அதனால்


மறுப்பதற்கு மன்னிக்கவும்.




நண்பனே


நட்புஸ்தானம் பெற்று


உடனே வா


தொடருவோம் தோழமையை.......

நட்பு...


மழலைப் பருவத்தில்

பார்த்து வியக்க

ஒரு நட்பு...



குழந்தைப் பருவத்தில்

ஓடி விளையாட

ஒரு நட்பு...


காளைப் பருவத்தில்

ஊர் சுற்ற

ஒரு நட்பு...


வாலிபப் பருவத்தில்

பேசி ரசிக்க

ஒரு நட்பு...


முதிர்ந்த பின்

அனுபவங்களைப்

பகிர்ந்து கொள்ள

ஒரு நட்பு...


நட்புகள் ஆயிரம் இருந்தும்

நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது

தோள்களில் சாய

நட்பு வேண்டும்...


துன்பத்தின் போது

கண்ணீர் துடைக்க

நட்பு வேண்டும்...


மகிழ்ச்சியின் போது

மனம் மகிழ

நட்பு வேண்டும்...


நானாக நானிருக்க

நட்பே...

நீ எனக்கு

நட்பாக வேண்டும்..

Thursday, August 30, 2007

'ஏன்' என்பது பலமானால் 'எப்படி' என்பது சுலபமாகும்

மனிதப்பிறவி மகத்தான ஒன்று. இதற்கு உதாரணம் இரண்டு. ஒன்று சிரிப்பு, இன்னொன்று கனவு. கனவென்பது நம் ஆழ்மனது எண்ணங்களின் வெளிப்பாடு. அது வெறும் நிழல், நிஜமல்ல. ஆனால் கனவுகளை நனவாக்க இயலுமா? முயன்றால் முடியாதது உண்டா?நீங்கள் உங்களுடைய ஆசைகளை, கனவுகளை, லட்சியங்களை முதலில் எழுதுங்கள்!


1. அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி

2. நடக்கும், நடக்காது என்றெல்லாம் யோசிக்கவே கூடாது

3. இன்று இரவே இந்திய ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பில்கேட்ஸ் ஆகவேண்டும் என்று நினைத்தால்கூடத் தவறில்லை

4. என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே எழுதுங்கள்

5. எழுதிவிட்டீர்களா?

இனிப் பாருங்கள் மனித மனத்தின் மகத்துவத்தை!நினைப்பதைப் பெரிதாகவே நினைத்து வையுங்கள். அது பேராசை என்று பிதற்றுபவர்கள், சத்தியமாகப் பித்தர்கள் என்று ஒரு புறம் ஒதுக்கித் தள்ளுங்கள். "உனது குறிக்கோள் வானத்தை நோக்கி இருக்கட்டும், அப்போதுதான் நீ மர உச்சியையாவது அடைவாய், அதை விடுத்து உன் குறிக்கோளே மர உச்சிதான் என்றால் தரையைவிட்டுக் கிளம்புவதிலேயே தடுமாற்றம் ஏற்படும்" காஞ்சிப்பெரியவர் தெய்வத்தின் குரலில் சொன்னது. அதனால்தான் நமது முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் நம்மைக் "கனவு காணுங்கள்" என்றார். "கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதாக மட்டும் இருக்கக்கூடாது, உன்னைத் தூங்கவிடாமல் செய்வதாகவும் இருக்கவேண்டும்" என்பதற்காகவே அப்படிச் சொன்னார். நீங்கள் வாழும் வாழ்க்கை உங்களுடையது, நீங்கள் பயணிக்கும் பாதை உங்களுடையது, லட்சியம் உங்களுடையது, குறிக்கோள் உங்களுடையது, காணும் கனவு உங்களுடையது. பிறகென்ன? மற்றவைகளை உதறித்தள்ளுங்கள். "ஆயிரம் மைல்கள் கடந்த ஒரு பயணம் நீ எடுத்துவைக்கும் முதல் அடியில்தான் தொடங்குகிறது" என்றொரு பொன்மொழி உண்டு. அருட்தந்தை ராபர்ட் ஷ்யூலர் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரின் ஒரு பெரிய கனவு என்ன தெரியுமா? அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், லாஸ் ஏஞ்சலீஸுக்கு அருகில் சான்டா ஆனா என்றொரு நகரம் இருக்கிறது. அந்தப்பகுதி வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் இவற்றால் அடிக்கடி பாதிக்கப்படக்கூடிய ஒன்றாகும். அங்கு ராபர்ட் ஷ்யூலர் அவர்கள் முழுக்க முழுக்க கண்ணாடியாலான ஒரு பேராலயத்தைக் கட்டவேண்டும் என்று ஆசைப்பட்டார். உடனே ஒரு தேர்ந்த நிபுணரை வரவழைத்து ஆலோசிக்கும்போது, அந்த நிபுணர், சற்று கேலியாகவும், கிண்டலாகவும், ஆச்சர்யத்தோடும் "இதற்கு அதிகச் செலவாகும், தங்களிடம் அவ்வளவு பணம் இருக்கிறதா?" எனக்கேட்க, அருட்தந்தை ‘அவ்வளவு பணம் இல்லை’ எனக்கூறிவிட்டார். ‘தேவாலயம் கட்டமுடியாது’ எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டு அந்த நிபுணர் சென்று விட்டார். ஆனால் தந்தை ராபர்ட் மனதில் அந்தக் கனவு மறையவே இல்லை. அந்தத் தேவாலயத்தைக் கட்டிமுடித்து 1980-ல் இந்த உலகத்துக்கு ‘நமது கனவை நனவாக்க முடியும்’ என்று நிரூபித்துவிட்டார். வெறுமனே அல்ல, உலகத்திலேயே மிகப்பெரிய கண்ணாடியாலான ஒரு தேவாலயம் என்ற கூடுதல் சிறப்போடு சாதித்துக் காட்டினார். இன்றும் ஒவ்வொரு ஞாயிறன்றும் பெரிய பெரிய பிரபலங்கள் அங்கு வந்து சொற்பொழிவாற்றுவதோடு, "ஹவர் ஆப் பவர்" (Hour of Power) என்ற அந்த ஜெபம் உலகம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்கச் செம்மல் நெல்சன் மண்டேலா அவர்களின் 1994 சொற்பொழிவு சிறப்பான ஒன்று. "நாம் இயலாதவர்கள் என்பதால் நான் பயப்படவில்லை, நம்மால் எதுவும் இயலும் என்பதால்தான் பயப்படுகிறேன்". என்ன ஒரு நெருப்புத் தெறிக்கும் வாக்கியம்! உங்கள் கேள்விகள், "நான் அறிவாளியா? தகுதியானவனா? என்னால் முடியுமா?" என்பவை அல்ல. "நான் ஏன் அறிவாளியாக இருக்கக் கூடாது? நான் ஏன் தகுதியானவனாக இருக்கக்கூடாது? என்னால் ஏன் முடியாது?" என்பவைதான். நம் கையிலுள்ள தீப்பொறி வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம். ஆனால் பற்றப்போவது பிரபஞ்ச நெருப்பு. இந்தப்பொறி உங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. தீப்பந்தத்தை ஏந்திப்பிடிக்கக் கற்றுக்கொண்டால், மற்றதை அது முடித்துவைக்கும். இந்தப் பூமியில் மனிதராகப் பிறந்தது எதற்காகவோ குறைந்தபட்சம் அதைச் செய்தாலே நாம் எட்ட நினைக்காத லட்சியத்தை எட்டமுடியும். ஒரு செயலைத் திரும்பத் திரும்ப நாம் தவறாகச் செய்தாலும் அது ஒவ்வொரு முறையும் புதுப் புது உத்திகளைத் தரும். "தோல்வி மூலம் நாம் பெறப்போகும் உத்திகளுக்காகவேனும் மனிதன் தோல்வியுறவேண்டும்" . முதலில் நமக்கு நாமே போட்டுக்கொண்ட வட்டத்தை விட்டு வெளியே வருவோம். இந்த உலகத்தில் மனித சாதனைகளுக்கு மட்டும் எல்லையே இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். நாம் குழந்தைகளாக இருக்கும்பொழுது பல எட்டமுடியாத கற்பனைகளைச் செய்வதுண்டு. நாம் வளர வளர நமது கற்பனைகள் தேய்ந்துவிடுகின்றன. நாம் எப்படி நமது மூளைக்குப் பயிற்சி கொடுக்கிறோமோ அதனை அது அப்படியே செய்யும். உங்களைக் கனவு காணச் சொல்வது, கற்பனை செய்யச் சொல்வது உங்களின் மூளைக்கு நாம் கொடுக்கும் பயிற்சியே தவிர வேறொன்றுமில்லை. நீஙகள் என்னவாக விரும்புகிறீர்களோ, அதனை எழுதி வையுங்கள், மனதில் அதை மட்டுமே நினைத்து உங்கள் பயணத்தைத் தொடருங்கள், காலை எழுந்ததும், இரவு உறங்கு முன்பும் நீங்கள் உங்கள் ஆசையை, கற்பனையை நினைத்துப் பாருங்கள், சொல்லிப்பாருங்கள். நீங்களே ஆச்சர்யப்படும்படி ஒருநாள் ஆகியிருப்பீர்கள். இன்று வெற்றி நடைபோடும் சாதனையாளர்கள் ஒவ்வொருவரும் செய்த பயிற்சிதான் இது. அவர்களுக்கும் நமக்கும் ஏன் ஒவ்வொருவருக்கும் இருப்பது அதே மூளைதான், அதே நேரம்தான், அதே உணர்வுகள்தான். அவர்களால் முடியும்பொழுது ஏன் நம்மால் முடியாது? முடியும். மூளைக்குப் பயிற்சி மட்டும் கொடுத்தால் நிச்சயமாக முடியும். உங்கள் மூளை, நீங்கள் அடையப்போகும் வெற்றியை மட்டுமே பார்க்கட்டும்."ஏன் என்பது பலப்படும்போது, எப்படி என்பது சுலபமாகிவிடும்".
புரியும்படி சொல்கிறேன். ஏன் நம்மால் முடியாது என்று நினையுங்கள். எப்படி முடியும் என்பதை உங்கள் மூளை சொல்லும். எனவே மூளை சொல்லவேண்டும் என்றால் அதற்குப் பயிற்சி தேவை, பயிற்சிக்கு கனவு, கற்பனை, லட்சியம், குறிக்கோள் தேவை. உங்கள் எண்ணம் எப்போதும் இலக்கை மட்டுமே பார்க்கவேண்டும். ஒருவேளை நாம் தோற்றுவிட்டால்? என்று நினைக்காதீர்கள்! நாம் ஜெயித்துவிட்டால்! என்று நினைத்துப் பாருங்கள்! இதுவரை நாம் நம்மைப்பற்றிக் கனவு கண்டிருக்கிறோமா? நமது வாழ்க்கையில் வெற்றி அடைவதைப்பற்றி நினைத்துப் பார்த்திருக்கிறோமா? நான் இப்படி ஆகவேண்டும் என்று யோசித்திருக்கிறோமா? இது உங்கள் வாழ்க்கை, உங்கள் லட்சியம், உங்கள் கனவு, உங்கள் இலக்கு! இதில் நீங்கள்தான் ஹீரோ. தூரம் அதிகமில்லை! சாதிக்க ஏது எல்லை! வாழ்த்துக்கள்!!

நட்பும் பகையும்

ஒரு பக்கதன் காட்டுலே ரொம்பவும் கடுமையா தவம் பண்ணிக்கிட்டிருந்தான்! கடவுள் உடனே அவனுக்கு முன்னாடி வந்து காட்சி கொடுத்தார்! கையிலே கதாயுதம் வேறே வச்சிருந்தார். “பக்தா! உன்னுடைய பக்தியை மெச்சினேன்! ஊனக்கு என்ன வரம் வேணுமோ கேள் தர்றேன்”னாரு! இப்படி சொன்னதுக்கப்புறம் பக்தன் சும்மா இருப்பானா? “பகவானே! ஏன்னுடைய முன்னேற்றத்துக்குத் தடையா இருக்கிற சக்திகளை உன்னுடைய கதாயுதத்தாலே தாக்கி – வீழ்த்தி – அழிச்சுடணும்! இதுதான் என்னுடைய வேண்டுகோள்!” அப்படின்னான்! பகவான் இதைக் கேட்டார். முகத்துலே புன்னகை, “அதுக்கென்ன? அப்படியே செஞ்சுடறேன்!”. ஆப்படின்னு சொல்லிப்புட்டு மறைஞ்சுட்டார். கொஞ்ச நேரம் ஆச்சு! ஆண்டவன் கையிலே இருந்த கதாயுதம் வேகமா வந்தது! வரம் கேட்டானே பக்தன், அவன் மார்பையே நோக்கி வந்து தாக்க ஆரம்பிச்சுட்டுது, அப்படியே தடுமாறி கீழே விழுந்துட்டான். இது ஏதுடா வரம் கேட்டது வம்பாப் போச்சின்னு நினைக்க ஆரம்பிச்சுட்டான்! “அய்யய்யோ ஆண்டவனே! ஏன்னப்பா இது? என்னுடைய முன்னேற்றத்துக்குத் தடையா இருக்கும் பகைவநன அல்லவா தாக்கச் சொன்னேன். நீ ஞாபகமறதியா ஏதாவது பண்ணிப்புட்டியா? உன்னுடைய கதாயுதம் என்னையே வந்து தாக்குதே! குறிகிறி தவறிப் போச்சா!” அப்படின்னு கத்த ஆரம்பிச்சுட்டான் பக்தன்! கடவுள் மறுபடியும் காட்சி கொடுத்தார். பக்தனைப் பார்த்து சொன்னார் : “பக்தா! நீ கேட்டபடிதான் நான் ஆயுதத்தை வீசினேன்! ஞாபகமறதிலாம் ஒண்ணும் கிடையாது! குறிதவறியும் அது வந்துடலே! சுரியாத்தான் வந்திருக்கு! மத்தவங்களை தாக்கணும் - வீழ்த்தணும் - அழிக்கணும்ன்னு நினைக்கிற உன் மனம்தான் உனக்குப் பகைவன் - எதிரி எல்லாம்! உன் முன்னேற்றத்துக்குத் தடையா இருக்கிறது நீயோதான்! அதனாலேதான் இது உன்னையே வந்து தாக்கியிருக்கு!” அப்படின்னு கடவுள் சொன்னாராம்! இதுலேயிருந்து…. நமக்கு எதிரி யார்? ஏன்கிறதை நல்லா புரிஞ்சிக்கிட்டோம் இல்லையா? நமக்கு நண்பர்கள் யார்? நுமக்கு கிடைக்கிற நண்பர்களை மூணு வகையா பிரிச்சுடலாம்! புனைமரம் - தென்னைமரம் - பாக்குமரம் இப்படி! பனைமரம் இருக்கே இதுதான் மூளைக்கும் - தானாகவே தண்ணி குடிச்சிக்கும் - தானாகவே வளரும்! நமக்கு பலன் கொடுக்கும். நமக்கு வலிய வந்து உதவி செய்யிற நண்பர்கள் இந்த ரகம்! தென்னைமரம் இருக்கே இதுக்கு எப்பவாவது தண்ணீர் விட்டா போதும்… வளர்ந்துடும்! இதுமாதிரி எப்பவாவது உதவி செஞ்சா அதை ஞாபகம் வச்சிருந்து நமக்கு உதவி செய்யிற நண்பர்கள் தென்னைமரம் மாதிரி! பாக்கு மரம் இருக்கே இதுக்கு தினமும் தண்ணீர் விட்டாத்தான் வளரும், பலன் கொடுக்கும்! இதுமாதிரி தினமும் உதவி செஞ்சாத்தான் நம்மை கவனிக்கிற நண்பர்கள் உண்டு! இவங்களையெல்லாம் பாக்கு மரம் மாதிரி! ஆக நண்பர்களை இந்த வகையிலே அடையாளம் கண்டுகிட்டு அதுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்கணும்! ஆனா……. இந்த காலத்தோட கோலம் எப்படின்னா…… நா நல்லதுன்னு நினைச்சி இன்னொருத்தருக்கு உதவி செஞ்சாக்கூட உபத்திரவத்துலே மாட்டிக்கிறாப்புலே ஆயிடுது! ஒருத்தர் வந்தார்……. “சார்! ஆத்து வெள்ளத்துலே நான் தத்தளிச்சிக்கிட்டு இருந்தப்ப என்னைக் காப்பத்தினது நீங்கதானா சார்!” ன்னு கேட்டார். அதுக்கு இவரு சொன்னார் : “ஆமாம்! அதனாலே என்னப்பா? அது என் கடமை இதுக்குப்போய் நன்றியெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லே”ன்னார். இதுக்கு இந்த ஆளு : “அதுக்கில்லே சார்! சட்டைப்பையிலே ஒரு 25 காசு வச்சிருந்தேன்! அதை காணோம்! அதுக்காகத்தான் கேட்டேன்”னாராம்! இது எப்படி?

வணக்கம்

Welcome to this site..
Hi Friendz, I'm Achchuthan. From Colombo.


You are most welcome to check the rest of this site, By clicking on the links in the site menu.
Have Fun!!