Friday, November 27, 2009

எலிக்குப் பதிலாக ஏழை


pharma6குழந்தைகளுக்கான மருந்துகள் அமெரிக்காவில் விற்பனைக்கு வருவதற்கு முன் ஆபிரிக்காவில் குழந்தைகளில் ஆபத்தானதா என்று பரிசோதனை செய்யப்படுகிறது.

மேற்குநாடுகளில் செல்வந்த நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கு முன்னர் குறிப்பிட்ட மருந்துகள் இந்தியாவிலும், பெருவிலும் ஏழைகளில் பரிசோதிக்கப்பட்டு அவர்கள் கடும் நோயாளிகளாக்கப்படுகிறார்கள் அல்லது உயிர் பறிக்கப்படுகிறார்கள்.

பொதுவாக எலியில் பரிசோதனைகள் நடாத்தப்படுவது அனைவருக்குமே தெரிந்த விடயம். ஆனால் எலிகளுக்குப் பதிலாக ஏழைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை எத்தனை பேர் அறிந்திருக்கிறோம் என்பது கேள்வியே.

மனிதருக்கு வரும் நோய்களைக் குணப்படுத்துவதற்கான மருந்து முதலில் எலி பின்னர் குரங்கு என்று படிப்படியாக மனிதரை அண்மிய விலங்குகளில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக அநுமதிக்கப்பட்ட/ ஆபத்தற்றதென்று கணிக்கப்படும் மருந்துகள் அவை பற்றிய விளக்கத்தின் பின், தாமாக முன்வரும் மனிதர்களில் பரிசோதிக்கப்படுகிறது. இறுதியாக விற்பனைக்கு வருகிறது.

இவை மருந்து தயாரிப்புத் தொடர்பான அறியப்பட்ட நடைமுறைகள். ஆனால் மனிதரில் சோதைனை செய்யப்படுவதற்கு அநுமதி மறுக்கப்பட்ட/ ஆபத்தானது என்று அறியப்பட்ட மருந்துகள் அவை பற்றிய எந்த விளக்கங்களும்/ அநுமதியும் இன்றி மனிதர்களில் பரீட்சிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. இது பற்றிய ஊகங்கள் இதுவரை வெளியிடப்பட்ட போதும், இப்போது சுவீடன் வானொலியொன்று ஆதாரங்களுடன் இந்தப் பயங்கரத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இது தனியே ஒரு குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தினது பயங்கரம் மட்டுமல்ல, பொதுவாக பெரிய மருந்து நிறுவனங்கள் அனைத்தையும் பற்றியதுதான்.

pharma1Astra-Zeneca என்ற இங்கிலாந்து-சுவீடன் நாடுகளின் மருந்து நிறுவனம் Schizophrenia என்ற நோயை Seroquel என்ற மருந்து எவ்வளவு காலத்திற்கு திரும்ப வரவிடாமல் தடுக்கும் என்று அறிய விரும்பியது. 2005-2007 வரை இதற்காக 327 நோயாளிகள் இந்தியா, உக்ரெய்ன், ரஷ்யாவிலிருக்கும் 26 பரிசோதனை முகாம்கள் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்களது நோய்க்கு இதுவரை கொடுக்கப்பட்ட மருந்து அவர்களுக்குத் தெரியாமலே நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட மருந்துக்குப் பதிலாக Astra-Zeneca மருந்து நிறுவனம் பரிசோதிக்க விரும்பிய Seroquel மருந்து செலுத்தப்பட்டது. இந்த நோயாளிகளுக்கு Schizophrenia நோய் திரும்ப முழு அளவில் தாக்கும்வரை இந்தப் பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது. 327 நோயாளிகளுக்கும் இந் நோய் திரும்பத் தாக்கியதில், 36 பேர் நிரந்தர நோயாளியானார்கள். நோயின் கடுமை தாங்க முடியாமல் ஒரு நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.

நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த வழமையான மருந்து நிறுத்தப்பட்டதும், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று அறியப்பட்ட மருந்தை அவர்களுக்கு கொடுத்ததும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சுவீடன் Goteborg பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Christian Munthe என்ற விரிவுரையாளர் உட்பட உலகமெங்குமிலிருந்தும் பல அறிஞர்கள் கண்டித்தார்கள்/எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

pharma5இந்தப் பரிசோதனையத் தங்கள் நாட்டு நோயாளிகள் மீது மேற்கொள்வதற்கு இந்தியா, உக்ரெய்ன், ரஷ்யா நாடுகள் அனுமதியளித்தன என்று Astra-Zeneca நிறுவனம் திமிராகப் பதிலளித்தது. இங்கேதான் பிரச்சினையே இருக்கிறது. ஆபத்தானது என்று இந்த மருந்தை மனிதர்களில் பரிசோதிப்பதற்கு ஐரோப்பிய கூட்டமைப்பு தடை விதித்திருந்தது. அப்படியிருந்தும் இலஞ்சம், ஊழல் நிறைந்த நாடுகளின் அதிகாரிகள்/ அரசியல்வாதிகள் விலைக்கு வாங்கப்பட்டு, ஏழை நோயாளிகளில் பரிசோதனை நடாத்தப்பட்டது. இந்த மருந்து நிறுவனம் திட்டமிட்டே இந்த நாடுகளைத் தெரிவு செய்ததுடன், மனிதருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதையும் நன்கு அறிந்தே மருந்துப் பரிசோதனையை வெற்றிகரமாக நடாத்தி முடித்தது.

Shell, Esso….. போன்ற இன்னும் பல எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் கோடிக் கணக்கில் காசு கறப்பதும், ஈராக், அப்கானிஸ்தான் போர்களில் முக்கிய பங்கு வகிப்பதும் குறிப்பிடத்தக்கது. எரிபொருளுக்கு அடுத்தபடியாக மருந்து தயாரிக்கும் நிறுவனங்களே கோடிக் கணக்கில் பணத்தைக் கறக்கின்றன. ஆபிரிக்காவில் எய்ட்ஸைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என்று வருடாவருடம் அமெரிக்கா/ ஐரோப்பிய நாடுகள் நிறைய பணம் செலவழித்து ஆடம்பரக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆபிரிக்காவின் வறிய மக்கள் நோய்க்குரிய மருந்தை வாங்க முடியாதளவுக்கு அதன் விலை வானம் வரை உயர்ந்திருப்பது குறித்து கூச்சல் போடும் இந்த நாடுகளுக்கு கொஞ்சமும் கூச்சமில்லை.

இங்கேதான் அடுத்த கொடுமை தெரிகிறது. ஈவிரக்கமமற்ற அரசியல்வாதிகளால் கைநிறையப் பணம் வாங்கிக் கொண்டு பலிக்கடாக்களாக விற்கப்பட்டும் ஏழை மக்கள தம்மில் பரிசோதிக்கப்படும் ஆபத்தான மருந்துகளை வாங்கக் காசில்லாமல், வெறும் பரிசோதனைக்கூடங்களாய் நோய்வாய்ப்பட்டு பரிதாபமாக செத்துப் போகிறார்கள்.

pharma3பெரும்பாலான மருந்துகளைப் போலவே தங்களில் பரிசோதிக்கப்படும் மருந்துகளைக் கூட இந்த வறிய மக்களால் வாங்க முடிவதில்லை.

2008 இல் திரும்பவும் தென்னமெரிக்கா, ஆசியா. கிழக்கைரோப்பா நாடுகளிலிருந்து ஏழை நோயாளிகள் தெரிவு செய்யப்பட்டு, மருந்துகள் பரிசோதிக்கப்பட்டன. வெற்றிகரகமாகப் பரிசோதிக்கப்ப்பட இந்த மருந்துகளை வாங்கியவர்கள் 86% மேற்கைரோப்பா, அமெரிக்கா, யப்பானைச் சேர்ந்த செல்வந்த நோயாளர்கள்.

அப்படியானால் இந்த மருந்துகளை வாங்கிய மிகுதி 14% யார்?

வேறு யாராக இருக்கும்!

தமது நாட்டுமக்களை பரிசோதனைக் கூடங்களாக்கி சாகடிக்கும் வறியநாடுகளின் அரசுகளும் அவர்களை அண்டிய அதிகார கும்பல்களும் தான் !!

Thursday, November 19, 2009

வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக்க முப்பது வழிகள்

1. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள்

2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

3. நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக் கொள்ளுங்கள்.

4. செய்யக் கூடாது என்று நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழகிக் கொள்ளுங்கள்.

5. நீண்ட நாளைய பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி, உங்கள் பசுமையான பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

6. இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப் பற்றிய புது விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

7. ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

8. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழத்துண்டுகளையோ, காய்கறிகளையோ, விரும்பி உண்ண பழகுங்கள்.

9. நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நீங்கள் விரும்புகின்றவர்களிடமோ, அல்லது நெருக்கமானவர்களிடமோ, மனதார பகிர்ந்து கொள்ளுங்கள்.

10. உங்களுக்கு பிடித்த, உங்களை கவர்ந்த கவிதைகளை அடிக்கடி நினைத்து பார்த்து பரவசமடையுங்கள்

11) அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள் – நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதே உங்களுக்குத் திரும்பி வருகிறது.

12) நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் பாராட்டுங்கள் – பாராட்டுக்களால் மகிழ்வுறுவது ஒரு இயற்கையான மனித சுபாவம்.

13) மன்னிப்பைக் கேட்குமுன்பே மன்னித்து விடுங்கள் – இரவு உறங்கு முன்பு தனக்கு எதேனும் தவறு இழைதவர்களை மனதார மன்னித்து விடுங்கள்.

14) எவரைப் பற்றியும் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

15) மனத்தை ஒரு குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் – எதிர்மறையான எண்ணங்கள், பொறாமை, பேராசை, கோபம் ஆகியவை துன்பம் விளைவிக்கும்.

16) எது நடக்கிறது என்பதைவிட நடந்ததை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதே முக்கியம் – சில நடப்புக்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் நிம்மதியை நிச்சயிக்கிறது.

17) நல்லது நடக்குமென்றே நம்புவோம் ஆனால் மோசமானவை நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.

18) குழந்தைகளிடம் தன்னுடைய பெற்றோர்கள் எப்போதும் தங்களிடம் அக்கறை காட்டவும், வழிகாட்டவும் இருக்கிறார்கள் என்ற முறையில் பழக வேண்டும்.

19) மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.

20) நாம் எப்போதுமே வெற்ற்¢ பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

21) நண்பர்கள் வாழ்கையில் முக்கியமானவர்கள்.

22) மனிதன் என்பவன் நல்லது கெட்டது கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு நாம் சாதனையை நோக்கி நடையிடவேண்டும்.

23) உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் உங்களுடைய குறைபாடுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.

24) மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள் – குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள்.

25) அச்சம் தவிருங்கள்.

26) இறைவனின் அருளால் எல்லாமே சாத்தியம்தான்.

27) நாளை நடப்பதைப் பற்றிக் கவலையுறாமல் இறைவன் உடன் இருக்கிறான் என்பதை நம்புங்கள்.

28) ஹாஸ்ய உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிரித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு இணைந்து ஒண்றாகச் சிரித்து வாழ வேண்டும். ஆனால் மற்றவர்க¨ளைப் பார்த்து நகைக்கக்கூடாது.

29) வெற்றி என்பது பணத்தினாலோ, பொருள்களினாலோ அளவிடப்படுவதில்லை. மகிழ்ச்சி என்பது நம் மனதின் நிலையைப் பொறுத்தே இருக்கிறது.

30) எந்த நிலையிலும் இறைவனை மனதார நினையுங்கள்

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள்

தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழந்தாலும் கீழ் காணும் எளிய முறைகளை பின்பற்றினால் இலட்சியத்தை எளிதில் எட்ட முடியும்.

* ஆடைஉங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகளை வாங்குவதற்கு பதிலாக, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக்கூடிய நல்ல தரமான ஆடைகளை அணியலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாகா இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிக்கையை ஊக்கபடுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகலுக்கு உண்டு. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்

* வேக நடை அட வேக நடை என்ன ஆக போகிறது என்று தானே நினைக்க போறிங்க?? ஒருவரது நடையை வைத்தே அவர் சோம்பேரியா இல்லை தெம்பானவரா என்பதை அறியலாம். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு இவரால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே உங்கள் வழமையான நடையில் இன்னும் 25% அதிகமாக்குங்கள்.

* நிமிர்ந்த நிலை எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கவிட்ட படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்யமுடியாது என பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமிர்ந்து நிற்பது , தலையை தொங்கப்போடமால் இருப்பது, எதிரில் உள்ள்வர்களின் கண்களை நேரே பார்ப்பது, பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் குணங்களாகும். பார்ப்பவர்க்கு நாம் தன்னம்பிக்கை உடையவர் என்ர உணர்வை உண்டாக்கும்.

* கேட்பது நல்ல விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர் பேச்சையும் அடிக்கடி கேட்கவும். 30 – 60 நொடிக்குள் உங்களது இலட்சியம் மற்றும் எதிர்காலம் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சத்தமாக பேசி பழகுங்கள். அல்லது எப்பொழுது தன்னம்பிக்கையை தூண்ட வேன்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லி பாருஙள்.

* நன்றி உங்களது வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள்.அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும், அவ்வாறு பட்டியல் இடும்போதுதான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புக்கள் மற்றும் தன்னம்பிக்கை உண்டாக்ககூடிய விஷயங்களை நம் வாழ்வில் நடந்து உள்ளன என தெரியும். இவை நமது மனச்சோர்வை அகற்றி தன்னம்பிக்கையோடு வாழ வழி வகுக்கும்.

* மனதார பாராட்டுங்கள் - நம்மை நாமே “நெகட்டிவ்” ஆக நினைக்கும்போது மற்ற்வர்களை பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவ் ஆக இருக்கும். இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்ட கற்று கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும் பெரிதாக பாராட்டுங்கள். மற்றவர்கள் பற்றி குறை கூறுவதை விடுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்து போகும்.. இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

* முன்னால் உட்காருங்கள் மற்றவர்களின் நல்ல குணாதிசயங்களை பார்க்கும்போது நமக்குள்ளே மறைந்திருக்கும் நல்ல குணாதிசயங்களும் தானே வெளிவரும். பாடசாலை, பொது விழாக்கள், மற்றும் கூட்டங்களில் அமரும்போது எப்போதும் பின் இருக்கையில் அமரவே விரும்புவர். இது தன்னம்பிக்கை குறைபாடாகும். ஆகவே இனிமேல் எங்கு சென்றாலும் முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள். மனதில் உல்ல பயம் போய் நம்பிக்கை அதிகரிக்கும்.

* பேசுங்கள்சிலர், பலர் கூடி இருக்கும்போது பேசவே தயங்குவர். மற்றவர்கள் நம்மை முட்டாள் என நினைத்து விடுவார்களோ என்ற பயம் தான். இனி பயம் இன்றி உங்கள் மனதில் பட்டதை தைரியமாக சபைகளில் எடுத்து பேசுங்கள். இதனால் நமது எண்ணத்தில் ஒரு நம்பிக்கை பிறக்கும். மற்றவர்கள் உங்களை தலைவர்களாக ஏற்று கொள்வர். எல்லோரிடத்திலும் தரியமாக பேசினாலே தன்னம்பிக்கை உங்களை தேடி வரும்.

* உடல்வாகு - நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும். அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீது நமக்கே நம்பிக்கை இழக்க நேரிடும். ஆகவே உடற்பயிற்சி செய்து, நமது உடலை பாதுகாப்பாக வைத்து கொண்டால் தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாகும்.

* நாடு நாடென்ன செய்தது நமக்கு, என கேள்விகள் கேட்பது எதற்கு?? நாம் என்ன செய்தோம் அதற்கு என்று நினைத்தால் நன்மை நமக்கே..! நம்மை பற்றியே எப்போதும் சிந்திக்க கூடாது. நம்மை சுற்றி உள்ளவர்களையும் சமுதாயத்தையும் பற்றியும் சிந்திக்க வேண்டும். “கடமையை செய் பலனை எதிர்பாராதே” இது நாவுக்கரசரின் அழகிய வரிகள். எனவே பிறருக்காகவும் வாழ பழகுவோம்..!

இந்த தன்னம்பிக்கை நமது எல்ல திறனையும் வெளிக்காட்ட உதவும்.இவற்றை நாளைக்கு நாளைக்கு என தள்ளி போடமல் இன்றே முடிவு செய்து தொடங்குங்கள். இனி வெற்றி உங்கள் பக்கமே..

Friday, October 30, 2009

காதல் என்பது...

உடலும் மனசும் இலயிக்குமிடம்
எதுவோ அதுதான் காதலோ!
ஏனெனில் காதலின்றி
உடல்செல்லும் பாதையில்
மனம் இலயிப்பதில்லை
மனம்செல்லும் பாதையில்
உடல் இலயிப்பதில்லை
காதலின்றி
பகலும் இரவும் வேறுபாடில்லா
இவ்விரைச்சல் உலகில்
நிசப்தம் மட்டுமே நிலவுகிறது
உரசிசெல்லும் தென்றல்கூட
துக்கம் விசாரிக்கின்றன
காதல் என்பது
எதிர்பாலின ஈர்ப்பு அல்ல
கண்கள் வழி உள்ளங்கள்
பேசும் மொழி அது.
இயற்கையைக் காதலி
காலங்கள் மாறினாலும்
உலகில் நிலைத்து நிற்கும்
கதை சொல்லும் அது.
நல்ல புத்தகங்களைக் காதலி
உற்ற தோழனாய் வெற்றிக்கு
மேற்கோள் காட்டும் அது.
உயிர்களைக் காதலி
மீண்டும் ஓரு
அன்னை தெரசாவாக
மதிக்கபடுவாய் இவ்வுலகில்

அழகின் அழகு..

அழகுக்கு ரோஜாவைப் பார் என்பார்


கண்ணுக்கு மீன்களே உறவு என்பார்


நெற்றிக்கு பிறைநுதல் எனப் பெயரிடுவார்


புருவத்திற்கு வில்லைத் துணை தேடுவார்


உதட்டிற்கு கனிகளைக் கட்டி இழுப்பார்


நாசிக்கு தென்படா எள்பூவை வேண்டுவார்


முகத்தை அமாவாசையிலும் ஓர் மதி என்பார்


கால்களுக்கு வாழைத்தண்டை வம்புக்கிழுப்பார்


நடைக்கு அன்னத்தை நோக்கி சுட்டிடுவார்


இவை அனைத்திற்கும், நீ ஒருத்தி போதுமே !


பின் எதற்கு தேவை உதாரணமும், உவமானமும் ?


இதை மறந்துவிட்டு பாரெல்லாம் ஒன்றொன்றாய்த்


தேடிடும் இக்கவிஞர்கள் படும் பாட்டைப் பாராயோ!

Thursday, October 29, 2009

தூக்கம் வராதது ஏன்?

சில சமயங்களில் சிலரின் உயிரியல் கடிகாரம் சரிவர இயங்க முடியாமல் பழுதடைந்து விடுகிறது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் என்னதான் அசதியுடன் படுத்தாலும் உறங்க முடியாமல் போய்விடுகிறது. அப்போது அவர்கள் மனதில் நினைவலைகள் மீண்டும் மீண்டும் எழுந்து அவர்களின் மனக்கண் முன் உலவிக் கொண்டு இருக்கும். அப்படியே அவர்கள் உறங்கினாலும் சீக்கிரமே எழுந்து விடுவார்கள். அல்லது இரவில் ஆழ்ந்த உறக்கமின்றி இடையிடையே நிறையத் தடவைகள் விழித்தெழுந்து படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார்கள். இதனால் காலையில் எழும்போது மனச்சோர்வுடனும் அசதியுடனும், தூக்கக் கலக்கத்துடனும் காணப்படுவார்கள். இந்நிலையைப் "போதிய உறக்கம் அற்ற நிலை' என்பார்கள்.


பகலில் ஏற்படும் மனஅழுத்தமும், மனக்குழப்பமும், மனக்கலக்கமும் இரவில் உறக்கத்தில் அச்சம் கலந்த கனவுகளாக வெளிப்படும். இவர்களின் இந்த திகில் கனவுகளில் யாரோ துரத்துவது போலவும், தப்பிக்க வழியின்றித் தலைதெறிக்க ஓடுவது போலவும், விபத்து ஏற்படுவது போலவும், மோசமான சிக்கலில் சிக்கி கொள்வது போலவும் காட்சிகள் விரியும். உடல் வியர்வையில் குளித்து, திகிலில் உறைந்து நடுநடுங்கி விழிப்பார்கள்.

பணியிடத்திலோ அல்லது இல்லத்திலோ அதிக மன வேதனையில் மூழ்கியதால், அதிகமாக சிகரெட் குடித்தல், அதிகமாக காப்பி, டீ அருந்துதல், மது மற்றும் போதைப் பொருட்கள் எடுத்துக் கொள்ளுதல் மற்றும் நெடுநேரம் தொலைக்காட்சி பார்த்தல் போன்றவை தூக்கத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் அதிக எடை, தூக்கத்தில் வலிப்பு, பலமான குறட்டை, தூக்கத்தில் விட்டு விட்டு மூச்சுவிடுதல் போன்றவைகளும் உறக்கத்தை கெடுத்துவிடும்.

தூக்கம் வருவது எப்படி?

நாம் படுத்த உடன், உடனே ஆழ்ந்த தூக்கத்திற்குப் போய் விடுவதில்லை. கண்களை மூடியதும், தூக்கம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் தழுவுகிறது. கண்கள் செருகி, தூங்கத் துவங்கியதும், வெளிவிஷயங்கள் தெரிவதில்லை, இதுதான் நமது தூக்கத்தின் முதல்நிலை. இந்நிலையில், மூளையில் "பீட்டா' மின்னலைகள் தோன்றுகின்றன. இதன் வேகம் விநாடிக்கு 14 சைக்கிள்கள்.

மூளை இயங்கும்போது அதிலிருந்து பல்வேறு மின்னலைகள் தோன்றுகின்றன. இதை E.E.G என்ற கருவியின் மூலம் அளக்க முடியும். இக்கருவி மூளையின் செயல் பாட்டை ஒரு விநாடிக்கு இத்தனை சைக்கிள் வேகத்தில் இயங்குகிறது என்று காண்பிக்கும்.


பின்பு, சிறிது நேரத்தில் நாம் சலனமின்றி, ஆழ்ந்த உறக்கத்திற்குப் போய்விடுவோம். இந்நிலையில், கண்ணிமைகள் மூடி இருந்தாலும் நம் விழிகள் பக்கவாட்டில் உருளும்.இவ்வகை உறக்கத்தில்தான் மூளையில் "ஆல்ஃபா' என்ற மின்னலைகள் தோன்றுகின்றன. இதன் வேகம் விநாடிக்கு 7லிருந்த 14 சைக்கிள்கள். இம்மின்னலைகள் நமது உடலின் களைப்பை போக்க உதவுகிறது; உள்ளம் புத்துணர்ச்சி பெற பயன்படுகிறது. ஒருவனை "அறிதுயிலில்' (Hypnotism) ஆழ்த்தும் போது அவன் மூளையில் "ஆல்ஃபா' மின்னலைகள் உற்பத்தியாகின்றன.

அதேபோல் ஒருவன் தியானத்தில் ஈடுபடும் பொழுது அவனது மூளையில் "ஆல்ஃபா' மின்னலைகள் உற்பத்தியாகின்றன. இந்த இரண்டாம் நிலைத் தூக்கத்தில்தான் கனவுகள் ஏற்படுகின்றன.பின் நாம் தூக்கத்தின் மூன்றாம் நிலைக்குச் செல்கிறோம். இந்த மூன்றாம் நிலைத் தூக்கத்திலும் கூட நமது விழிகள் இலேசாக உருளும். இவ்வகை உறக்கத்தின்போது மூளையில் "தீட்டா' மின்னலைகள் தோன்றுகின்றன. இதன் வேகம் விநாடிக்கு 4 முதல் 7 சைக்கிள்கள் வரை. இந்நிலையில் நீங்கள் சற்று ஆழ்ந்து உறங்குவீர்கள்.

இந்த மூன்று நிலைகளைக் கடந்த பின், உறக்கம் மிக மிக ஆழமாக ஏற்படுகிறது. இந்த மிக ஆழ்நிலை உறக்கத்தில்தான் மூளையில் "டெல்ட்டா' என்ற மின்னலைகள் தோன்றுகின்றன. இம்மின்னலையின் வேகம் விநாடிக்கு 1 முதல் 4 சைக்கிள்கள் வரை ஆகும். இம்மின் அலைதான் நமது மூளையை என்றும் இளமையாகச் செயல்பட வைக்கிறது. இந்நிலையைத் தவிர, நமது மூளை உணர்வற்றுவிடுகிற, " உணர்வற்ற நிலை' (COMA) என்ற நிலையும் உள்ளது. இந்நிலையில், நமது மூளையில் எவ்வித மின் அலையும் தோன்று வதில்லை. இந்நிலையில் மூளையின் செயல்பாடு வெறும் சைபர் (Zero) தான்!

Saturday, October 24, 2009

நுழைவு தேர்வு போன்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற!!!

நுழைவு தேர்வை ரத்து செய்துவிட்டதால் என் போன்ற திறமையான மாணவர்கள் திறமையை நிருப்பிக்க வழி இல்லாமல் போய்விட்டது, என்னதான் இருந்தாலும் அதில் அதிக மதிப்பெண் வாங்கும் டெக்னிக்கை மறந்து விடாமல் வாழையடி வாழயாக போற்றி பாதுக்காக்க வேண்டியது எனது கடமை. ஆகையால் இத்தனை நாட்களாக கட்டிகாத்து வந்த ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன்.

12வது தாண்டுவதற்கே முப்பது குட்டிகரணம் போடும் என்னை போன்ற ஆட்கள் 49 மார்க் நுழைவு தேர்வில்எடுப்பது எப்படி என்ற ரகசியத்தை சொல்கிறேன், உங்களிடம் வேண்டி கேட்டு கொள்வது எல்லாம் இதை தயவு செய்து வியாபாரம் ஆக்கிவிட வேண்டாம். அது போல் குரு காணிக்கையாக எதுவும் எனக்கு வேண்டாம்.

நுழைவு தேர்வில் இனி 49 மார்க் எடுப்பது எப்படி. அவசியம் மூன்று ரப்பர், 1 பென்சில், ஒரு பால் பாயின்ட் பென் (ஏன் 3 ரப்பர், 1 பெண்சில் என்ற கேள்வி நீங்க கேட்பது புரிகிறது பதில் கடைசியில்) தேர்வு அறைக்கு முன் செல்லும் முன் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்...ஒரு ரப்பரை எடுத்து அதன் நான்கு பக்கங்களிளும் 1,2,3,4 என்று எழுதி கொள்ளுங்கள். பின் கொஸ்டின் பேப்பரை கொடுத்த உடன் நீங்கள் எடுக்க வேண்டியது உங்கள் பெண்சிலை அல்ல..உங்கள் ரப்பரை.. எடுத்து அதை உங்கள் டேபிள் மேல் தாயகட்டை உருட்டுவது போல் உருட்டிவிடுங்கள் அதில் மூன்று என்று வந்தால்முதல் கேள்விக்கு பதில் மூன்றாவது கட்டத்தில் என்ன இருக்கிறதோ அதுதான் விடை.

அதுபோல் எல்லா கேள்விக்கும் உருட்டி எல்லா கேள்விக்கும் விடை அளியுங்கள்.

ம்ம்ம் இப்ப கேளுங்க உங்க சந்தேகத்தைஏன் மூன்று ரப்பர் அதுதானே?
உருட்டி விடும் பொழுது முன்னாடி போய் விழுந்துட்டா அத எடுக்க என்று உங்க நேரத்தை வீணடிக்காமல் அடுத்த ரப்பரை எடுத்து உருட்ட ஆரம்பித்து விடுங்கள்.

ம்ம்ம் அடுத்தது என்ன இப்படி செய்வதால் 49 மார்க் வாங்க முடியுமா அதுதானே! கண்டிப்பா 200 க்கு 49 மார்க நான் வாங்கினேன்.


இதன் நன்மைகள்

முன்பு கண்னை மூடிக்கொண்டு ஒரு பதிலை தொடும் முறை இருந்துவந்தது அதில் நிறைய bugs இருப்பதால் அதற்க்குமாற்றாக இந்த முறை, கண்னை மூடி கொண்டு தொடும் முறையில் தவறாக கேள்வியையே தொடும் வாய்ப்பு அதிகம்அது போல் முதல் கேள்விக்கு அடுத்த கேள்விக்கான பதிலை தொடும் வாய்ப்பும் அதிகம் ஆகையால் இது அதிகமுறை சோதனைக்கு உட்படுத்த பட்டு அதில் நான் வெற்றியும்(????) பெற்றதால் உங்களிடம் சொல்கிறேன்.

Thursday, October 22, 2009

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2.
உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3.
உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம்பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம்போட்டுகிட்டு இருப்பாங்க..!

4.
வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5.
எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6.
மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப்பார்வையோடு..!

7.
உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாமஇருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8.
சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம்கொண்டாடுவீங்க..!

9.
ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ்.அமிர்தா,சுகிர்தா..]

10.
.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. .சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பைகீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11.
விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12.
புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட்பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்டமறக்கவே மாட்டீங்க..!

13.
செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14.
அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாமஇருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க..ஆனா சொல்ல மாட்டீங்க..!

15.
உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16.
உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17.
அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர்,வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18.
பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி,போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19.
கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20.
இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..