Tuesday, June 30, 2009

விடியல்...

இரவெல்லாம்
விடியாமல்
நீண்டுகொண்டே
இருக்கிறது...
நாளை உன்னை
பார்க்கத் துடிக்கும்
என் மனதின் வேதனை
அறியாமல்!
விடிவது
முக்கியமல்ல...
உன் விழிகளில்
நான் விழுவதே
முக்கியம்..!

உடைந்த கண்ணாடியில்

உடைந்த கண்ணாடியில்
முகம் பார்க்கப் பழகிக் கொள்.
அதில்
உன் தலையிலிருக்கும் பூக்கள் தெரியாது போகலாம்
ஆகாயம் தெரியக்கூடும்
ஆகாயத்தில் பறக்கிற பறவைகளும் தெரியலாம் ஒருவேளை.
உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்கின்ற
வருத்தத்தையறிந்த பறவைகளில் ஒன்று
கண்ணாடியின் அருகாமையில் முகம் தெரியப்
பறந்து கடக்கலாம் உன்னை.

வருத்தமற்ற முகத்தை
உடைந்த கண்ணாடித் துண்டில்
அப்பறவை வேறெங்கேனும் காணும்
அப்போது
ஜன்னலின் வழியே
பறவைகள் ஒவ்வொன்றும் விட்டுச் செல்லும்
ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாய்.