Friday, August 28, 2009

ஒரு சிங்கத்தை கொல்வது எப்படி.....

ர ஐனிகாந்த்:

1)இதோ அடிக்க போகிறேன். அதோ தாக்க போகிறேன் என்று எச்சரிக்கை செய்து கொண்டே இருக்க வேண்டும். சிங்கம் பயத்திலேயே வாழ்ந்து, பயத்திலேயே செத்துவிடும்.
2) இல்லையென்றால் ர ஐனி முகத்திலே போட்டிருக்கும் மேக்கப்பை எடுத்து சிங்கத்தின் மீது போட்டுவிடவேண்டும். எடை தாங்காமல் செத்துவிடும்.

கமலஹாசன்:

சிங்கத்தின் அருகே சென்று ஓவென்று கதறி அழவேண்டும். துக்கம் தாங்காமல் சிங்கம் தானே செத்துவிடும்.

ஜெயலலிதா:

இரவு 2 மணிக்கு போலிசை கொண்டு தூங்கிகொண்டிருக்கும் சிங்கத்தை கொல்ல வேண்டியதுதான்.

கருணாநிதி:

முதலில் சிங்கத்தை உடன்பிறப்பாக்க வேண்டும்.ஒரு மாதம் தொடர்ந்து 'சிங்கமே என் உடன்பிறப்பே ' என்ற ரீதியில் கடிதங்கள். பிறகு ஜெயலலிதாவின் வழக்கமான அட்டகாசத்தை காரணமாக வைத்து 'சிங்கமே என் உடன்பிறப்பே நீ எனக்காக தற்கொலை பண்ணாதே' என்று கடிதம் வந்ததும் தலைவர் தன்னை தற்கொலை பண்ண சொல்கிறார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு சிங்கம் தற்கொலை செய்துகொள்ளும். அவ்வளவுதான்.

மணிரத்னம்:

சிங்கத்துக்கு சூரியவெளிச்சமே காட்டகூடாது. ஒரே ஒரு மெளுகுவர்த்ர்தியை கொளுத்தி வைத்து இருட்டறையில் குசு குசு என்று பேசிக்கொண்டே இருக்க வேண்டும். சிங்கம் தானே தற்கொலை செய்து கொள்ளும்.

பாரதிராஜா:

நெப்போலியனை அனுப்பி திருப்பாச்சி அரிவாளால் ஒரே போடு.அவ்வளவுதான். தீர்ந்தது.

சங்கர்:

சிங்கத்தை ஆஸ்திரேலியா-அல்லது அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கே சுவிஸ்லான்ட் ஆல்ப்ஸ் மலை செட் போட்டு நல்ல அழகான லொகேஸனில் கொம்பியுட்டர் அனிமேஷனில் எலும்பு தனி சதை தனியாக பிரிக்க வேண்டியதுதான்.

விஜயகாந்த்:

இன்னும் 5 சிங்கங்களை கொண்டு வந்து எல்லாவற்றுடனும் ஓரே நேரத்தில் சண்டை போட்டு 5 சிங்கங்களையும் கொன்று விட வேண்டும்.அதன் பின் பழைய சிங்கத்திடம் உலகத்தில் மொத்தம் 25000 சிங்கம் இருக்கு. அதுல நம்ம நாட்டுல ம்ட்டும் 3000 சிங்கம் இருக்கு. நம்ம தமிழ்நாட்டுல மட்டும்...............சிங்கம் வெறுத்து போயி தானே தற்கொலை பன்னிக்கும்.

ஷாருக்கான்:
அசோகா மாதிரி படம் எடுத்து சிங்கத்திடம் போட்டு கட்டாயம் பார்க்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

ஒரு வித்தியாசமான காதல் கடிதமும் அழகான பதிலையும் பாருங்களேன்.

கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் தனது வகுப்புத் தோழிக்கு கேள்வி பதில் வடிவத்தில் காதல் கடிதம் எழுதுகின்றான்.

என்னுடைய அன்பான காதலிக்கு,

இந்த கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் அளித்தால்

பிரிவு அ க்கு பத்து மார்க்கும்
பிரிவு ஆ க்கு 5 மதிப்பெண்களும்
பிரிவு இ க்கு 3 மதிப்பெண்களும் கிடைக்கும்.

1) நீ வகுப்பறையில் நுழையும்பொழுது உன் பார்வைகள் என்னில் வந்து விழுகின்றது ஏனென்றால் ,

அ ) நீ என்னைக் காதலிக்கின்றாய்
ஆ) என்னைப் பார்க்காமல் உன்னால் இருக்க முடியவில்லை
இ) உண்மையில்...நான் உன்னை பார்க்க வைக்கிறேனா..?

2) ஆசிரியர் ஜோக் சொல்லும் பொழுது நீ சிரித்துக்கொண்டே என்னைத் திரும்பிப் பார்க்கிறாய் ஏனென்றால் ,

அ) நான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க நீ விரும்புகிறாய்
ஆ) எனக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறதா என்று நீ சோதனையிடுகிறாய்
இ) என்னுடைய சிரிப்பு உனக்கு கவர்ந்திருக்கிறது

3) நீ வகுப்பறையில் பாடிக்கொண்டிருக்கும் சமயம் நான் உள்ளே நுழைந்தால் நீ பாடுவதை நிறுத்திவிடுவாய் ஏனென்றால் ,

அ) எனக்கு முன்னால் பாட நீ வெட்கப்படுகிறாய்.
ஆ) என்னுடைய வருகை நீ பாடுவதை தடுக்கின்றது
இ) நீ பாடுவது எனக்கு பிடிக்கவில்லையோ எனப் பயப்படுகிறாய்

4) உன்னுடைய சின்ன வயசுப் புகைப்படத்தை என்னிடமிருந்து நீ மறைக்கிறாய் ஏனென்றால்,

அ) நீ வெட்கப்ப்படுகிறாய்
ஆ) நான் ரசிக்கமாட்டேனோ என்று நினைக்கிறாய்
இ) எதற்கென்றே தெரியவில்லை



5. வருகின்ற பேருந்தையெல்லாம் விட்டுவிட்டு நீ நேற்று பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தாய் ஏனென்றால் ,

அ) நீ எனக்காக காத்திருந்தாய்
ஆ) என்னைப் பற்றிய கனவில் இருந்ததால் நீ என்னைக் கவனிக்கவில்லை
இ) எல்லாப் பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது

6. ஒரு மேடான பகுதியில் நீ ஏற முற்பட்டபொழுது நானும் அதே நேரத்தில் எனது நண்பனும் கைகளை நீட்டுகிறோம். நீ எனது நண்பனின் கைகளை பிடிக்கின்றாய் ஏனென்றால்,

அ) நான் ஏமாறுவதைக் கண்டு ரசிக்கின்றாய்
ஆ) வெட்கத்தில் நீ என் கையைப் பிடிக்கவில்லை
இ) பதில் சொல்லத் தெரியவில்லை..

7. உன்னுடைய பெற்றோர்கள் கல்லூரிகக்கு வந்தபோது நீ என்னை அவர்களிடம் அறிமுகப்படுத்தினாய் ஏனென்றால் ,

அ) நான் உன்னுடைய கணவனாகப் போவதால்
ஆ) உன்னுடைய பெற்றோர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக
இ) சாதாரண அறிமுகம்தான் எந்த வித காரணமுமில்லை

8. ரோஜாப்பூக்கள் தலையில் சூடி வரும் பெண்களை எனக்குப் பிடிக்கும் என்றேன். மறுநாள் நீ தலையில் ரோஜாப்பூக்களோடு வருகிறாய். ஏனென்றால் ,

அ) என்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக
ஆ) உனக்கு ரோஜாப்பூக்கள் பிடிக்கும்
இ) தற்செயலாக உனக்கு ரோஜாப்பூக்கள் கிடைத்தது.

9. என்னுடைய பிறந்த நாளில் நான் செல்லுகின்ற ஆலயத்திற்கு நீயும் வருகிறாய்..ஏனென்றால் ,

அ) எப்பொழுதும் போல தற்செயலாக நீ அந்த ஆலயம் வருகிறாய்..
ஆ) யாரும் வாழ்த்துவதற்கு முன் நீ என்னை வாழ்த்தவேண்டும் என்பதற்காக
இ) உனக்கு இறைபக்தி அதிகம் இருப்பதால் தினமும் ஆலயம் வருகிறாய்.

நீ நாற்பது மதிப்பெண்களுக்கும் மேலாக மதிப்பெண் பெற்றிருந்தால் நீ என்னை விரும்புகிறாய். தயங்காமல் உன் காதலைச் சொல்லிவிடு

நீ முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடையே மதிப்பெண்கள் பெற்றிருந்தால் உன் மனதில் காதல் மொட்டு விடத் தொடங்கியிருக்கியது. அது எந்த நேரமும் வெடிக்கக் கூடும்.

நீ முப்பதுக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தால். என்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்று நீ உனக்குள்ளேயே குழப்பத்தில் இருக்கின்றாய்
உன்னுடைய பதிலுக்காகக் காத்திருக்கின்றேன்.

----------------------------------------------------------------------------------------------

அதற்கு காதலியானவள் அதே கேள்வி பதில் வடிவத்தில் பதில் அளிக்கின்றாள்..

நண்பனே,

கீழ்கண்ட ஆம் அல்லது இல்லை என்ற எனது கேள்விகளுக்கு விடையளி..

1. முதல் பெஞ்சில் யாராவது இருக்கிறார்கள் என்றால் வகுப்பில் நுழையும் மாணவர்களை கவனிப்பது தற்செயலானதுதான்.

ஆம்
இல்லை

2. ஒரு பெண் யாருடைய நகைச்சுவைக்கோ சிரித்து - ரையாவது திரும்பி பார்த்தால் அதற்குப் பெயர் காதலா..?

ஆம்
இல்லை

3. பாடிக்கொண்டிருக்கும் போது பாடல் வரிகள் மறந்து விட்டால் அப்படியே நிறுத்தில விடுவது இயல்புதானே?

ஆம்
இல்லை

4. என்னுடை குழந்தை வயசு புகைப்படத்தை என் பெண் தோழிகளிடம் காட்டும்போது ஆண்மகனான நீ நாகரீகம் கருதி ஒதுங்கிச் செல்ல வேண்டும்..

ஆம்
இல்லை

5. பேருந்து நிலையத்தில் நான் எனது உயிரத் தோழிக்காக காத்திருக்க கூடாதா என்ன..

ஆம்
இல்லை

6. உனது கைகளை பிடிக்காமல் உனது நண்பனின் கையைப் பிடிக்கும்பொழுதே உன்னால் புரிந்து கொள்ளமுடியவில்லையாடா..?

ஆம்
இல்லை


7. நீ என்னுடைய நண்பன் என்று எனது பெற்றோர்களிடம் அறிமுகப்படுத்தக் கூடாதா..?

ஆம்
இல்லை

8. நான் லோட்டஸ் - காலிப்ளவர் - பனானா போல இருப்பதாக கூட நீ கூறியிருக்கின்றாய்தானே?

ஆம்
இல்லை

9. ஓ உனக்கு அன்றுதான் பிறந்த நாளா..? அது எனக்குத் தெரியாது. நான் தினமும் அந்த ஆலயத்திற்கு வருவேன் தெரியுமா..?

ஆம்
இல்லை

இந்த கேள்விகளுக்கெல்லாம் நீ ஆம் என்று பதிலளித்தால் நான் உன்னை காதலிக்கவில்லை என்று அர்த்தம்

நீ இல்லை என்று பதிலளித்தால் உனக்கு காதலைப் பற்றியான உண்மையான அர்த்தம் தெரியவில்லை என்று அர்த்தம்.

மர்பியின் விதியில் மாட்டாதோர் உண்டோ?

12B பேருந்துக்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கிறீர்கள்.12B பஸ் வரவே வராது.17D யாக போய்க்
கொண்டேயிருக்கும்.ஒரு நாள் 17D பஸ் பிடிக்க வருகிறீர்கள்.ஒரே 12B மயமாக இருக்கும். ஒரு மணி நேரமாகியும் 17D வராது.இதைத் தான் மர்பி லா (Murphy's law) என்கிறார்கள்.அதாவது "Things will go wrong in any given situation, if you give them a chance".இதை தான் நம் ஆட்கள் "நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும்" என்றார்கள்.

அன்றாடம் வாழ்வில் நாம் அனைவரும் அனுபவிக்கும் ஒரு அவஸ்தைதான் இந்த மர்பி லா.

நீங்கள் நீண்ட வரிசையில் நிற்கும்போது உங்கள் வரிசை முன்னுக்கு நகராது போல் தோன்றும்.பக்கத்து வரிசை வேகமாய் நகரும்.

நெடுஞ்சாலையில் உங்கள் கார் போகும் லேன் எப்போதுமே அடுத்த லேனை விட மெதுவாகவே நகரும்.

குடை வைத்திருந்தால் மழை பெய்யாது.மழை பெய்யும் போது குடையிருக்காது.(நா உப்பு விக்கப்போனா மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது பாட்டு நினைவுக்கு வருகிறது.)

அவசரமாய் பிரிண்ட் அவுட் எடுக்க வந்தால் அப்போதுதான் பேப்பர் ஜாம் ஆகும்.

வீட்டில் சாதம் இல்லாத போது ரொம்ப பசிக்கும்.சாப்பாடு ரெடி என்றால் பசிக்காது.

தண்ணீர் கைக்கு எட்ட இல்லையென்றால் ரொம்ப தாகம்
எடுக்கும்.

Restroom அருகில் எங்கும் இல்லாத போது தான் அது வரும்.

இப்படியாக பலப் பல.

கெட்ட குடியே கெடும்,கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துகொண்டு கொடுக்கும்.அது கூரையை சரிபண்ணவே சரியாய் போய்விடும்.இதெல்லாம் மர்பி விதியின் சாரம் கொண்டவையே.இப்படி "Anything that can go wrong, will, and at the worst possible moment" போன்ற விதிளெல்லாம் Edward A. Murphy-யின் பெயரில் "மர்பி லா" எனப்படுகிறன.

இனிமேல் இந்த அவஸ்தைகளின் போது மர்பி லாவை நினைத்துக்கொள்ளுங்கள்.

மாணவர்கள் பரீட்சையில் சித்தி எய்தாவிட்டால் அது நிச்சயமாய் அவர்களது தவறு அல்ல. ஏனென்று கேட்கிறீர்களா? இதோ காரணங்கள்...

மு.கு. இது மாணவர்கள் சிரிக்க மட்டும். நிச்சயமாய் சிந்திப்பதற்கு அல்ல, அல்ல, அல்ல. smile.gif smile.gif (மாணவர்கள் அல்லாதவர்கள் சிந்தித்தாலும் பாதகமில்லைங்கோ, ஹி ஹி) tongue_smile.gif

1. ஒரு வருடத்தில் இருக்கும் நாட்களின் எண்ணிக்கை 365 நாட்கள் மட்டுமே.

2. அதில் 52 நாட்கள் ஓய்வு (ஓய்வு ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம், தெரியும்தானே? ) எடுக்க வேண்டிய ஞாயிறு நாட்கள். அவை போனால், மிகுதியாக இருப்பது 313 நாட்கள்.

3. கோடை விடுமுறை 50 நாட்கள். அப்போது மிகவும் சூடாக இருக்குமாதலால் படிப்பது கஷ்டம். அத்துடன் அவர்கள் ஊர் எல்லாம் சுற்றிப் பார்த்து தமது பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியதும், உற்றார் உறவினருடன் பொழுதைக் கழிக்க வேண்டியதும் அவசியம். மிகுதியாக இருப்பது 263 நாட்கள்.

4. ஒவ்வொருநாளும் 8 மணித்தியால நித்திரை உடலுக்கும் மூளைக்கும் அவசியம். எனவே 8 x 365 = 2920 மணித்தியாலங்கள் நித்திரை வேண்டும். அது கிட்டத்தட்ட 122 நாட்கள். எனவே மிகுதியாக இருப்பது 141 நாட்கள்.

5. உடல்பயிற்சி உடலுக்கு அவசியமென்பதால், கடைசி 1 மணித்தியாலம் ஒவ்வொருநாளும் விளையாட வேண்டும். அது 1 x 365 = 365 மணித்தியாலங்கள் = 15 நாட்கள். எனவே மிகுதியாக இருப்பது 126 நாட்கள்.

6. அமைதியாக, ஆறுதலாக சாப்பிடுவது அவசியம் என்பதால் ஒவ்வொருநாளும் 3 அல்லது 4 வேளை உணவுக்கும், ஒவ்வொருநாளும் 2 மணித்தியாலம். அது 2 x 365 = 730 மணித்தியாலங்கள் = 30 நாட்கள். எனவே மிகுதியாக இருப்பது 96 நாட்கள்.

7. மனிதன் ஒரு சமூக அமைப்பை கொண்டிருப்பதால், ஒவ்வொரு நாளும் ஒரு மணித்தியாலமாவது மற்றவர்களுடன் சேர்ந்து, கதைத்து இருக்க வேண்டியது அவசியம். அது 1 x 365 = 365 மணித்தியாலங்கள் = 15 நாட்கள். எனவே மிகுதியாக இருப்பது 81 நாட்கள்.

8. ஒரு வருடத்தில் பரீட்சை வரும் நாட்கள், கிட்டத்தட்ட 35 நாட்கள். மிகுதியாக இருப்பது 46 நாட்கள்.

9. பொது கொண்டாட்டங்கள், பொது விழாக்கள், பொது விடுமுறை நாட்கள் எல்லாமாக கிட்டத்தட்ட 40 நாட்கள். எனவே மிகுதியாக இருப்பது 6 நாட்கள் மட்டுமே.

10. அந்த 6 நாட்களில், வருடத்தில் ஒரு 3 நாட்களாவது ஏதாவது சுகவீனம் வரும் சந்தர்ப்பம் இருப்பதால், மிகுதியாக இருப்பது 3 நாட்கள் மட்டுமே.

11. ஏதாவது படம் பார்க்க, வீட்டில் நடக்கும் ஏதாவது ஸ்பெஷல் விசேஷங்களுக்கு 2 நாட்கள் ஒதுக்கலாம். இப்போது மிகுதியாக இருப்பது 1 ஏ 1 நாள் மட்டுமே.

12. அந்த ஒரு நாள், அவரது பிறந்த நாள்.

பிறகு மாணவர்கள் எப்போது படிப்பதாம்? tongue_smile.gif tongue_smile.gif

Thursday, August 27, 2009

ஆத்தி... இப்புடுச் சூடி!

டிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பு

சையை அப்ளிகேஷன் போடு

ங்கிலீஷில் பீட்டர் விடு

"ஈ"மெயிலில் ஆட்டின் அனுப்பு

ம்மா உம்மம்மா பண்ணு



ரெல்லாம் உன் லவ்வை பரப்பு

துக்கெடுத்தாலும் கிரீட்டிங் அனுப்பு

கப்பட்ட குதாம்ஸ் காட்டு

ஸ்க்ரீமா வாங்கிக் குடு

"ன்ஸ்மோர்" போலாமானு கேளு

ட்டல்களில் துட்டு அழு

ளவையாரா பிலிம் காட்டறாளா...

பிகரை மொதல்ல மாத்து! biggrin.gif biggrin.gif

அட சிரிங்கப்பா

கார் டிரைவர்: சாரி சார். பெட்ரோல் சுத்தமா தீர்ந்து போச்சு..இனிமேல் ஒரு அடி கூட முன்னால நகராது.

ஓனர் : சரி ரிவர்ஸ் கியர் போட்டு எடு, அப்படியே வீட்டுக்கு போய்டலாம்!

டிரைவர் :..............###???



நண்பர் : இவங்க ஒரே நேரத்துல பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"

கோபு: அப்படியா... அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"



கோபு: பச்சை கலர் மாத்திரை ஒரே கசப்பு. சிவப்பு கலர் டியூப் மாத்திரை சப்புனு இருக்கு. டானிக் நல்லா இனிக்குது.

டாக்டர்: இதை ஏங்க என்கிட்ட வந்து சொல்றீங்க?

கோபு: நீங்க தானே மருந்து சாப்பிட்டு எப்படி இருக்குன்னு வந்து சொல்ல சொன்னீங்க...அதான்!



கோபு தன்னோட பைக்கில் மூன்று நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார்.

போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க....டென்ஷனான கோபு: "ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு?"



கோபு: என் பள்ளி வாழ்க்கையிலேயே ஒரே ஒரு முறை தான் ஃபெயில் ஆகியிருக்கேன்.

நண்பர்: பரவாயில்லயே..எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?

கோபு: ஒண்ணாவது வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன் !

ஆண் , பெண் , ATM

ATM இயந்திரத்தில் பணம் எடுக்கும் ஆண்.
************************************
1. காரை நிறுத்துவான்.

2. இயந்திரத்தில் அட்டையை செருகுவான்.

3. குறியீட்டு எண்ணை அழுத்துவான்.

4. பணத்தையும் அட்டையையும் சேகரிப்பான்.

5. காரைக் கிளப்புவான்.



ATM இயந்திரத்தில் பணம் எடுக்கும் பெண்.
**************************************

1. காரை நிறுத்துவாள்.

2. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.

3. ஓடிக்கொண்டிருக்கும் எஞ்சினை ஆஃப் செய்வாள்.

4. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.

5. இயந்திரத்தை அணுகுவாள்.

6. கைப்பையில் அட்டையை தேடுவாள்.

7. அட்டையை செருகுவாள்.

8. குறியீட்டு எண்ணை அழுத்துவாள்.

9. அழுத்திய எண்களை ரத்து செய்வாள்.

10. கைப்பையில் எண் குறிப்பை தேடுவாள்.

11. மீண்டும் அட்டையை செருகுவாள்.

12. குறிப்பைப் பார்த்து எண் அழுத்துவாள்.

13. பணத்தை சேகரிப்பாள்.

14. காருக்கு திரும்புவாள்.

15. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.

16. காரை ஸ்டார்ட் செய்வாள்.

17. ஆஃப் செய்வாள்.

18. இறங்கி ஒடுவாள்.

19. இயந்திரத்தில் இருந்து அட்டையை பிடுங்குவாள்.

20. காருக்கு வருவாள்.

22. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.

23. ஸ்டார்ட் செய்வாள்.

24. 1 கிலோ மீட்டர் ஓட்டுவாள்.

25. ஹாண்ட் ப்ரேக்கை எடுத்து விடுவாள்

சில நிரந்தர விதிகள்..

எதுக்காவது வரிசையிலே நிக்கிறோம்ன்னு வச்சுக்கங்க.. நாம் நிக்கிற வரிசை மட்டும் நகரவே நகராது.. மத்த வரிசையெல்லாம் கிடு கிடுன்னு கரையும்.. கவனிச்சிருக்கீங்களா..?

*****************************************************************

தப்பா நம்பர் அடிச்சு போன் பண்ணினோம்ன்னு வைங்க.. எங்கேஜ்டா இருக்காது.. தப்பு நம்பர் எதிராளி தொடர்பு எல்லைக்குள்ளேயே இருப்பான்.. லொடக்குன்னு 2 ரூபா காலியாயிடும்..!

*****************************************************************

பைக்கையோ காரையோ தெரிஞ்சவரைக்கும் ரிப்பேர் பார்த்துட்டு, கையை ஆயிலாவோ, கிரீஸாவோ வச்சுருக்கோம்ன்னு வைங்க.. அப்பத்தான் மூக்கு அரிக்கும்.. உண்டா இல்லையா..?

*****************************************************************

உங்க முதலாளி ஏன் லேட் ன்னு கேட்டு வண்டி பஞ்சர் ன்னு சொல்லி சமாளிச்சுடுவீங்க.. சோதனையா மறுநாள் உண்மையாவே பஞ்சர் ஆகி முதலாளிக்கிட்டே பேய் முழி முழிச்சுருக்கீங்களா இல்லையா..?

*****************************************************************

வீட்டை பூட்டிட்டு வெளிலே கெளம்பும்போது தொலைபேசி ஒலிக்கும்.. திறந்து உள்ளே வர்றதுக்குள்ள நின்னு போயிடும்..

*****************************************************************

ஒரு முக்கியமான ஆளு அவங்கூட சேராதே ன்னு சொல்லியிருப்பாங்க. நீங்களும் சின்சியரா சரின்னுருப்பீங்க.. மறுநாளே அவ்னோட சுத்தறத அந்த முக்கியமானவங்க பாத்துடுவாங்க.. வாசஸ்தவம் தானே..?

*****************************************************************

ஒரு மேஜிக்'கையோ, இல்லே வேறே எதாவது வித்தையையோ கத்துட்டு வந்துருப்பீங்க. ஒரு ஆள அசத்தணும்ன்னு அதை செஞ்சு காமிக்கறப்போ சொதப்பிடும்.. அவங்க போனப்புறம் ஒரு தடவை செஞ்சு பார்ப்பீங்க.. கரெக்டா வரும்.. அப்படி நொந்து நூலாயிருக்கீங்களா இல்லையா..?

*****************************************************************

கொட்டாவி விட்டுட்டு வெட்டியா உக்காந்து இருப்பீங்க.. ஒரு வேலையும் இருக்காது.. ஒரு டீ சாப்பிடலாம்ன்னு கப்பை கையிலே எடுப்பீங்க.. உடனே ஒரு வேலை வானத்துலேருந்து குதிக்கும்.. சூடா அந்த டீயை குடிக்க விடாமப் பண்ணிடும்.. அனுபவிச்சுருக்கீங்களா..?


---------------------------------------------------

விடாக் கண்டன்..கொடாக் கண்டி..

ஒரு அழகான பொண்ணை ரொம்ப நாளா கணக்குப் பண்ணிகிட்டுருந்த பையன் ஒருத்தன், ஒரு விருந்துல சந்திச்சான்.. எப்படியும் அடைப்புக்குறி போட்டுறணும்ன்னு முடிவு பண்ணி, அவள்கிட்டே போயி கடலை போட ஆரம்பிச்சான்.. அவள் வெட்டிக்கிட்டே இருந்தா.. இவனுடைய மனந்தளரா முயற்சிகளும்.. அவளுடைய மூக்குடைப்புகளும்..

அவன் : நான் ஒரு புகைப்பட நிபுணர்.. உங்கள் முகம் போல அழகான முகத்தை நான் பார்த்ததே இல்லை.

இவள் : நான் முகச் சீரமைப்பு நிபுணர்.. உங்கள் முகம் போல நிறைய முகங்களை பார்த்திருக்கிறேன்..!

அவன் :இதற்கு முன் நாம் எங்கோ சந்தித்திருக்கிறோம் இல்லையா..?

இவள் : ஆமாம்.. அன்றிலிருந்து நான் அங்கு போவதையே நிறுத்திவிட்டேன்..!

அவன் : என் வாழ்க்கையில் இவ்வளவு நாளாக உங்களை எப்படி சந்திக்காமல் இருந்தேன்.?

இவள் : கண்ணுல படாம இருக்க நான் பட்ட பாடு எனக்குதானே தெரியும்..!

அவன் : பிரம்மன் முழுத்திறமையையும் காட்டி உங்களை உருவாக்கி இருக்கிறான்..

இவள் : இருக்கலாம்.. அடுத்ததாக படைத்தது உங்களையா..?

அவன் : வரும் சனிக்கிழமை நாம் எங்காவது வெளியில் போகலாமா..?

இவள் : மன்னிக்கவும்.. சனிக்கிழமை மாலையில் எனக்கு தலைவலி வந்து விடும்..!!

அவன் : உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா..?

இவள் : வேண்டாம்.. அந்தப் பேரை நீங்க வச்சுக்கிட்டா நல்லா இருக்காது..!

அவன் : நாம இப்போ சந்திச்சுக்கிட்டது பூர்வ ஜென்ம புண்ணியம்தான் இல்லையா..?

இவள் : என் கஷ்ட காலமாகவோ, பூர்வ ஜென்ம பாவமாகவோ கூட இருக்கலாம்..!

அவன் : உங்க பக்கத்து இருக்கை காலியாத்தானே இருக்கு..?

இவள் : ஆமாம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் உக்காந்து இருக்கறதும் காலியாகப் போகுது..!

அவன் : உன் மனசுல இருக்கறத தயங்காம என்கிட்டே சொல்லலாம்..

இவள் : அப்படியா.. இடத்தை காலி பண்ணு..!

அவன் : உன்னை சந்தோஷமா வச்சுப்பேன்..

இவள் : ஏன்.. கிளம்பப் போறியா..?

அவன் : நான் உன்கிட்டே என்னை கல்யாணம் பண்ணிக்கோ' ன்னு சொன்னா நீ என்ன சொல்லுவே..?

இவள் : ஒண்ணும் சொல்ல மாட்டேன்.. நான் ஜோக் கேட்டு சிரிக்கறப்போ என்னால பேச முடியாது..!

அவன் : உன் அழகு என் மனச கலக்குது..

இவள் : உன் பர்சனாலிட்டி என் வயித்த கலக்குது..!

அவன் : என்னைப் பார்த்து அன்பா ஒரு தடவையோ ரெண்டு தடவையோ சிரிச்சியா இல்லையா..?

இவள் : ஒரு தடவை தான்.. நான் எந்த தப்பையும் ரெண்டாவது முறை செய்யறதே இல்லை..!!

அவன் : உனக்காக இந்த உலகத்தின் மூலைக்கு கூட போவேன்..

இவள் : அங்கேயே இருந்துடு.. திரும்ப வந்துராதே..!!!

உன்னை கண்ட நாளிலே


உன்னை கண்ட நாளிலே

என் வாழ்வில் ஒரு புதிய மாற்றம்

உன்னிடம் பேசும் போதெல்லாம்

என் மனதில் ஏதோ ஒரு சந்தோசம்

நீ என் வாழ்வில் கிடைத்த

ஒரு இன்ப அதிர்ச்சி

நீ என் மனதில்

நீங்கா இடம் பெற்றிருப்பவள்

உன்னை நான் நினைக்காத

நாளோ நேரமோ இல்லை

நான் உன்னிடமிருந்து ஏதோ ஒரு

வித்தியாசமான அன்பை பெற்றுக்கொண்டேன்

நம் நட்பு காதலை விட புனிதமானது

நாம், நட்புக்கு ஒரு இலக்கணமாக இருப்போம்

தைரியமாயிரு

அன்று
நான் உன்னைப்
பார்க்கும் போது
நீ மண்ணைப்
பார்த்தாய்.

நேற்று
நான் உன்னைப்
பார்க்கும் போது
நீ என்னைப்
பார்த்தாய்.

இன்று
நான் உன்னைப்
பார்க்கும் போது
நீ உன்னையே
பார்க்கிறாய்.

பெண்ணே
மிரளாதே
காதலுக்கு
ஜாதி மதம் இல்லை.

நாளை
நான் உன்னைப்
பார்க்கும் போது
தைரியமாக நீ
என்னைப் பார்.

இதுவே வழியென
நாளைய உலகம்
நம்மைப் பார்க்கும்.

நம்புங்கள் இது நட்பு கவிதை

படித்து படித்து
நெஞ்சம் பரவித்து போனது !
நினைத்து நினைத்து
நெஞ்சம் சுமை தாங்கியது !

உன் நினைவுகளில்
நான் பசியாறிக் கொள்கிறேன்
மீண்டும் மீண்டும்
நான் படித்து பார்த்தாலும்
புத்தும் புதிய
வரிகளாக என் இதயத்தில் நிலவதேன்னே !
சந்தோஷ கனவுகளில் என்னை
மிதக்கவைத்த உயிரே
நானாக நானில்லை
நீ என்னுள் உருவாகி உறவானப் பின் ....!

என் மனதுடன் கலந்த உன் அன்பிற்கு என்ன தவம் செய்தேன் ...

Sunday, August 9, 2009

இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்

கனவு1

இங்கயும் முதல் கனவு மொபைல் தான் ஆனா ஒரு சின்ன வித்தியாசம் இவங்களுக்கு மொபைல் இவங்களே வாங்கிக்கிட மாட்டங்க.எல்லாம் தானா வரும் எப்பிடின்னா ஏமாந்த சோனகிரி என்னமாதிரி எத்தன பேரு இருக்காங்க தெரியுமா?....




கனவு2

காதலனோ பாய்ஃப்ரண்டோ யாரா இருந்தாலும் அவங்களோட இருசக்கர வாகனத்தில் துப்பட்டாவ மூஞ்சில மறைச்சபடி பயணிப்பது......




கனவு3

குட்டைய்யா இருக்குறவங்களுக்குன்னு தயாரிக்கப்பட்ட இந்த ஹைகீல்ஸை எல்லாரும் போட்டு நடக்குறது ...சிலர் கீழே விழுகவும் செய்றாங்க.....



கனவு4

காதுல வளையம் போடுறத மறந்துட்டு தொப்புளில் வளையம் போட்டுக்கிறது.....


கனவு5

உடை மாத்துறது மாதிரி காதலை தினமும் மாத்தி நாலைந்து பேரையாவது மெண்டல் ஆக்குவது.....




கனவு6

தெரியுமோ? தெரியாதோ? ஆனால் நாலு பசங்க அவங்கள கடக்கும்போது நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவது......




கனவு7

பியூட்டி பார்லர் போறோம்ன்னு சொல்லிட்டு பாக்குறவங்களயெல்லாம் பயமுறுத்துறது....



கனவு8

எல்லாரையும் திரும்பி பாக்க வைக்கிற மாதிரி? டிரஸ் போட்டுக்கிறது.....




கனவு9

கை கால்ன்னு ஒரு இடம் விடாம பச்சை குத்திக்கிறது....




கனவு 10

ஆசையா காதலிச்சவனை விட்டுட்டு ஆஸ்திரேலியாவோ இல்ல அமெரிக்கா மாப்பிள்ளையை கட்டிக்கிறது....

ஜாதிப்பெயர்கள்





வேலையில்லாதோர்







வேலையில் இருப்போர்








காதலிப்போர்








காதலிக்காதோர்







படிச்சவங்க









படிக்காதவங்க









கல்யாணமானோர்









கல்யாணமாகாதோர்








பணக்காரர்கள்









ஏழைகள்









ஆத்திகவாதிகள்









நாத்திகவாதிகள்