Friday, October 30, 2009

காதல் என்பது...

உடலும் மனசும் இலயிக்குமிடம்
எதுவோ அதுதான் காதலோ!
ஏனெனில் காதலின்றி
உடல்செல்லும் பாதையில்
மனம் இலயிப்பதில்லை
மனம்செல்லும் பாதையில்
உடல் இலயிப்பதில்லை
காதலின்றி
பகலும் இரவும் வேறுபாடில்லா
இவ்விரைச்சல் உலகில்
நிசப்தம் மட்டுமே நிலவுகிறது
உரசிசெல்லும் தென்றல்கூட
துக்கம் விசாரிக்கின்றன
காதல் என்பது
எதிர்பாலின ஈர்ப்பு அல்ல
கண்கள் வழி உள்ளங்கள்
பேசும் மொழி அது.
இயற்கையைக் காதலி
காலங்கள் மாறினாலும்
உலகில் நிலைத்து நிற்கும்
கதை சொல்லும் அது.
நல்ல புத்தகங்களைக் காதலி
உற்ற தோழனாய் வெற்றிக்கு
மேற்கோள் காட்டும் அது.
உயிர்களைக் காதலி
மீண்டும் ஓரு
அன்னை தெரசாவாக
மதிக்கபடுவாய் இவ்வுலகில்

அழகின் அழகு..

அழகுக்கு ரோஜாவைப் பார் என்பார்


கண்ணுக்கு மீன்களே உறவு என்பார்


நெற்றிக்கு பிறைநுதல் எனப் பெயரிடுவார்


புருவத்திற்கு வில்லைத் துணை தேடுவார்


உதட்டிற்கு கனிகளைக் கட்டி இழுப்பார்


நாசிக்கு தென்படா எள்பூவை வேண்டுவார்


முகத்தை அமாவாசையிலும் ஓர் மதி என்பார்


கால்களுக்கு வாழைத்தண்டை வம்புக்கிழுப்பார்


நடைக்கு அன்னத்தை நோக்கி சுட்டிடுவார்


இவை அனைத்திற்கும், நீ ஒருத்தி போதுமே !


பின் எதற்கு தேவை உதாரணமும், உவமானமும் ?


இதை மறந்துவிட்டு பாரெல்லாம் ஒன்றொன்றாய்த்


தேடிடும் இக்கவிஞர்கள் படும் பாட்டைப் பாராயோ!

Thursday, October 29, 2009

தூக்கம் வராதது ஏன்?

சில சமயங்களில் சிலரின் உயிரியல் கடிகாரம் சரிவர இயங்க முடியாமல் பழுதடைந்து விடுகிறது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் என்னதான் அசதியுடன் படுத்தாலும் உறங்க முடியாமல் போய்விடுகிறது. அப்போது அவர்கள் மனதில் நினைவலைகள் மீண்டும் மீண்டும் எழுந்து அவர்களின் மனக்கண் முன் உலவிக் கொண்டு இருக்கும். அப்படியே அவர்கள் உறங்கினாலும் சீக்கிரமே எழுந்து விடுவார்கள். அல்லது இரவில் ஆழ்ந்த உறக்கமின்றி இடையிடையே நிறையத் தடவைகள் விழித்தெழுந்து படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார்கள். இதனால் காலையில் எழும்போது மனச்சோர்வுடனும் அசதியுடனும், தூக்கக் கலக்கத்துடனும் காணப்படுவார்கள். இந்நிலையைப் "போதிய உறக்கம் அற்ற நிலை' என்பார்கள்.


பகலில் ஏற்படும் மனஅழுத்தமும், மனக்குழப்பமும், மனக்கலக்கமும் இரவில் உறக்கத்தில் அச்சம் கலந்த கனவுகளாக வெளிப்படும். இவர்களின் இந்த திகில் கனவுகளில் யாரோ துரத்துவது போலவும், தப்பிக்க வழியின்றித் தலைதெறிக்க ஓடுவது போலவும், விபத்து ஏற்படுவது போலவும், மோசமான சிக்கலில் சிக்கி கொள்வது போலவும் காட்சிகள் விரியும். உடல் வியர்வையில் குளித்து, திகிலில் உறைந்து நடுநடுங்கி விழிப்பார்கள்.

பணியிடத்திலோ அல்லது இல்லத்திலோ அதிக மன வேதனையில் மூழ்கியதால், அதிகமாக சிகரெட் குடித்தல், அதிகமாக காப்பி, டீ அருந்துதல், மது மற்றும் போதைப் பொருட்கள் எடுத்துக் கொள்ளுதல் மற்றும் நெடுநேரம் தொலைக்காட்சி பார்த்தல் போன்றவை தூக்கத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் அதிக எடை, தூக்கத்தில் வலிப்பு, பலமான குறட்டை, தூக்கத்தில் விட்டு விட்டு மூச்சுவிடுதல் போன்றவைகளும் உறக்கத்தை கெடுத்துவிடும்.

தூக்கம் வருவது எப்படி?

நாம் படுத்த உடன், உடனே ஆழ்ந்த தூக்கத்திற்குப் போய் விடுவதில்லை. கண்களை மூடியதும், தூக்கம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் தழுவுகிறது. கண்கள் செருகி, தூங்கத் துவங்கியதும், வெளிவிஷயங்கள் தெரிவதில்லை, இதுதான் நமது தூக்கத்தின் முதல்நிலை. இந்நிலையில், மூளையில் "பீட்டா' மின்னலைகள் தோன்றுகின்றன. இதன் வேகம் விநாடிக்கு 14 சைக்கிள்கள்.

மூளை இயங்கும்போது அதிலிருந்து பல்வேறு மின்னலைகள் தோன்றுகின்றன. இதை E.E.G என்ற கருவியின் மூலம் அளக்க முடியும். இக்கருவி மூளையின் செயல் பாட்டை ஒரு விநாடிக்கு இத்தனை சைக்கிள் வேகத்தில் இயங்குகிறது என்று காண்பிக்கும்.


பின்பு, சிறிது நேரத்தில் நாம் சலனமின்றி, ஆழ்ந்த உறக்கத்திற்குப் போய்விடுவோம். இந்நிலையில், கண்ணிமைகள் மூடி இருந்தாலும் நம் விழிகள் பக்கவாட்டில் உருளும்.இவ்வகை உறக்கத்தில்தான் மூளையில் "ஆல்ஃபா' என்ற மின்னலைகள் தோன்றுகின்றன. இதன் வேகம் விநாடிக்கு 7லிருந்த 14 சைக்கிள்கள். இம்மின்னலைகள் நமது உடலின் களைப்பை போக்க உதவுகிறது; உள்ளம் புத்துணர்ச்சி பெற பயன்படுகிறது. ஒருவனை "அறிதுயிலில்' (Hypnotism) ஆழ்த்தும் போது அவன் மூளையில் "ஆல்ஃபா' மின்னலைகள் உற்பத்தியாகின்றன.

அதேபோல் ஒருவன் தியானத்தில் ஈடுபடும் பொழுது அவனது மூளையில் "ஆல்ஃபா' மின்னலைகள் உற்பத்தியாகின்றன. இந்த இரண்டாம் நிலைத் தூக்கத்தில்தான் கனவுகள் ஏற்படுகின்றன.பின் நாம் தூக்கத்தின் மூன்றாம் நிலைக்குச் செல்கிறோம். இந்த மூன்றாம் நிலைத் தூக்கத்திலும் கூட நமது விழிகள் இலேசாக உருளும். இவ்வகை உறக்கத்தின்போது மூளையில் "தீட்டா' மின்னலைகள் தோன்றுகின்றன. இதன் வேகம் விநாடிக்கு 4 முதல் 7 சைக்கிள்கள் வரை. இந்நிலையில் நீங்கள் சற்று ஆழ்ந்து உறங்குவீர்கள்.

இந்த மூன்று நிலைகளைக் கடந்த பின், உறக்கம் மிக மிக ஆழமாக ஏற்படுகிறது. இந்த மிக ஆழ்நிலை உறக்கத்தில்தான் மூளையில் "டெல்ட்டா' என்ற மின்னலைகள் தோன்றுகின்றன. இம்மின்னலையின் வேகம் விநாடிக்கு 1 முதல் 4 சைக்கிள்கள் வரை ஆகும். இம்மின் அலைதான் நமது மூளையை என்றும் இளமையாகச் செயல்பட வைக்கிறது. இந்நிலையைத் தவிர, நமது மூளை உணர்வற்றுவிடுகிற, " உணர்வற்ற நிலை' (COMA) என்ற நிலையும் உள்ளது. இந்நிலையில், நமது மூளையில் எவ்வித மின் அலையும் தோன்று வதில்லை. இந்நிலையில் மூளையின் செயல்பாடு வெறும் சைபர் (Zero) தான்!

Saturday, October 24, 2009

நுழைவு தேர்வு போன்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற!!!

நுழைவு தேர்வை ரத்து செய்துவிட்டதால் என் போன்ற திறமையான மாணவர்கள் திறமையை நிருப்பிக்க வழி இல்லாமல் போய்விட்டது, என்னதான் இருந்தாலும் அதில் அதிக மதிப்பெண் வாங்கும் டெக்னிக்கை மறந்து விடாமல் வாழையடி வாழயாக போற்றி பாதுக்காக்க வேண்டியது எனது கடமை. ஆகையால் இத்தனை நாட்களாக கட்டிகாத்து வந்த ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன்.

12வது தாண்டுவதற்கே முப்பது குட்டிகரணம் போடும் என்னை போன்ற ஆட்கள் 49 மார்க் நுழைவு தேர்வில்எடுப்பது எப்படி என்ற ரகசியத்தை சொல்கிறேன், உங்களிடம் வேண்டி கேட்டு கொள்வது எல்லாம் இதை தயவு செய்து வியாபாரம் ஆக்கிவிட வேண்டாம். அது போல் குரு காணிக்கையாக எதுவும் எனக்கு வேண்டாம்.

நுழைவு தேர்வில் இனி 49 மார்க் எடுப்பது எப்படி. அவசியம் மூன்று ரப்பர், 1 பென்சில், ஒரு பால் பாயின்ட் பென் (ஏன் 3 ரப்பர், 1 பெண்சில் என்ற கேள்வி நீங்க கேட்பது புரிகிறது பதில் கடைசியில்) தேர்வு அறைக்கு முன் செல்லும் முன் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்...ஒரு ரப்பரை எடுத்து அதன் நான்கு பக்கங்களிளும் 1,2,3,4 என்று எழுதி கொள்ளுங்கள். பின் கொஸ்டின் பேப்பரை கொடுத்த உடன் நீங்கள் எடுக்க வேண்டியது உங்கள் பெண்சிலை அல்ல..உங்கள் ரப்பரை.. எடுத்து அதை உங்கள் டேபிள் மேல் தாயகட்டை உருட்டுவது போல் உருட்டிவிடுங்கள் அதில் மூன்று என்று வந்தால்முதல் கேள்விக்கு பதில் மூன்றாவது கட்டத்தில் என்ன இருக்கிறதோ அதுதான் விடை.

அதுபோல் எல்லா கேள்விக்கும் உருட்டி எல்லா கேள்விக்கும் விடை அளியுங்கள்.

ம்ம்ம் இப்ப கேளுங்க உங்க சந்தேகத்தைஏன் மூன்று ரப்பர் அதுதானே?
உருட்டி விடும் பொழுது முன்னாடி போய் விழுந்துட்டா அத எடுக்க என்று உங்க நேரத்தை வீணடிக்காமல் அடுத்த ரப்பரை எடுத்து உருட்ட ஆரம்பித்து விடுங்கள்.

ம்ம்ம் அடுத்தது என்ன இப்படி செய்வதால் 49 மார்க் வாங்க முடியுமா அதுதானே! கண்டிப்பா 200 க்கு 49 மார்க நான் வாங்கினேன்.


இதன் நன்மைகள்

முன்பு கண்னை மூடிக்கொண்டு ஒரு பதிலை தொடும் முறை இருந்துவந்தது அதில் நிறைய bugs இருப்பதால் அதற்க்குமாற்றாக இந்த முறை, கண்னை மூடி கொண்டு தொடும் முறையில் தவறாக கேள்வியையே தொடும் வாய்ப்பு அதிகம்அது போல் முதல் கேள்விக்கு அடுத்த கேள்விக்கான பதிலை தொடும் வாய்ப்பும் அதிகம் ஆகையால் இது அதிகமுறை சோதனைக்கு உட்படுத்த பட்டு அதில் நான் வெற்றியும்(????) பெற்றதால் உங்களிடம் சொல்கிறேன்.

Thursday, October 22, 2009

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2.
உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3.
உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம்பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம்போட்டுகிட்டு இருப்பாங்க..!

4.
வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5.
எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6.
மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப்பார்வையோடு..!

7.
உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாமஇருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8.
சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம்கொண்டாடுவீங்க..!

9.
ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ்.அமிர்தா,சுகிர்தா..]

10.
.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. .சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பைகீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11.
விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12.
புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட்பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்டமறக்கவே மாட்டீங்க..!

13.
செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14.
அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாமஇருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க..ஆனா சொல்ல மாட்டீங்க..!

15.
உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16.
உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17.
அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர்,வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18.
பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி,போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19.
கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20.
இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..