Friday, November 5, 2010

பரீட்சையில் BIT அடிக்கும்போது கவனிக்க வேண்டிய 20 விடயங்கள்

1. Bit அடிப்பதுக்கு தைரியம் ரொம்ப ரொம்ப அவசியம். தைரியமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள்

2. மிக மிக முக்கியம். கட்டாயம் (மறக்காமல்) பிட் ஐ கொண்டுபோகணும்………

3. பிட் இண்ட அளவு எவ்வளத்துக்கு சின்னதா இருக்குதோ அவ்வளவத்திக்கு நல்லது.....

4. பிட் ஐ வெள்ளை பேப்பரில் எழுவது நல்லது........

5. Bit ஐ பென்சிலால் எழுதாமல் இருப்பது நல்லது. மடிக்கும் போது அழிந்து போகச் சான்ஸ் உள்ளது…..

6. கடைசி நேரம் பிட் அடிப்பம் என்று இருப்பதை விட, முதலிலேயே பிட் அடிப்பது நல்லது……

7. பரீட்சை தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்னாலேயே செல்வதன் மூலம் பின் வருசையில் இடம் பிட்டிக்க முடியும்.

8. Bit ய் ஒழிச்சு வைக்க வேண்டிய இடங்களை முதலிலேயே தெரிவு செய்து வைக்கவும்.

9. உள்ளே சென்றவுடன் பிட் இ எடுத்து விடைத்தாள் புத்தகத்தினுள்ளே செருகவும். இது பிட் அடிக்க இலகுவாக இருக்கும்.

10. அதிக பிட் கொண்டு போனால், எது எங்கே வைச்சது என்ற குழப்பம் இருக்கலாம். அதற்காக இன்னொரு ஒற்றையில் என்னென்ன பிட் எங்கெங்கே இருக்கு என்பதை எழுதி பொக்கற்றினுள் வைத்துக்கொண்டு செல்லவும்.

11. பிட் கொண்டுவந்த விசயம் நண்பர்களுக்கு கூட தெரியாமல் விசயத்தை உங்களுக்குள்ளேயே வைத்திருங்கள். ஏன் என்டால், பரீட்சை எழுதும் போது,அவர்ளுக்கு ஏதாவது தெரியாமல் போனால், அவர்கள் உங்களை எதிர்பார்ப்பார்கள். நீங்கள் அவர்களுக்கு சொல்லிகுடுக்கேக, அங்கே உங்களுக்கே Bit அடிக்க முடியாமல் போயிடும்.

12. பிட் அடிக்கும் பொது நண்பர்களுக்கு சொல்லிக் கொடுப்பதை தவிர்க்கவும்.. சிலவேளை அதுவே உங்களுக்கு வினையகிடும்....

13. பிட் அட்டிகும்போது முழுசி முழுசி பார்க்க வேண்டாம். (சாதாரணமாக இருக்கவும்)

14. உங்களைச்சுத்தி எத்தனை பேர் இருக்கிறாங்கள்/ அவங்கள் நல்லவங்களா என்று முதலியே தெரிந்து வைப்பது நல்லது.... மாட்டிவிட்டப் பிறகு கோவப்படுவதை விட இது சிறந்தது.

15. புத்தகத்தில் ஒரு பக்கம் முழுதும் உபயோகமான Formulas உள்ளதென்றால், அதை 25% zoom down பண்ணி photocopy அடித்தால் சுலபம். இதன் பின்னாலும் எழுதலாம்.

16. Lectures Bit வைத்திருப்பவர்கள் தயவுசெய்து அவைகளை கொண்டுவந்து முன்னால் வையுங்கள் என்று பயமுறுத்தினாலும், அசரக்கூடாது. (அவர்கள் வந்து check பண்ணமாட்டார்கள்.)

17. பெண்கள் தங்களது காலில் Bit களை எழுதி வைக்கலாம். ஆண்கள் T-shirt போடுவதை தவிர்க்கவும். நீளக் கை சேட் அணியவும். Bit களை ஒழிச்சு வைப்பதும் கொண்டு செல்லவும், எடுத்து பார்க்கவும் இலகுவாக இருக்கும்.

18. எங்க வைக்கின்றோம் என்பது முக்கியமில்லை, எப்படி எடுக்கின்றோம் என்பது தான் முக்கியம். எடுப்பது இலகுவாக இருக்க வேண்டும்.

19. Bit அடிச்சு முடிய, Bit களை வைத்திருத்தல் கூடாது. ஜன்னலோரத்தில் இருந்தால் பிட் அடித்து முடிந்தவுடன் பிட்டை வெளியே எறிந்து விடவும். இது சுய பாதுகாப்பிற்காகவே.

20. Bit அடிப்பவர்களுக்கு ஆங்கில எழுத்தில் "A" ல் இருக்கக்கூடாது. (ஏனெனில், அவர்கள் தான் முன் வரிசையில் எப்போதும் அமர்வார்கள், அதனால் Bit அடிப்பது, கைக்கு எட்டினது, வாய்க்கு எட்டாத கதையா போகும்.)

பெற்றோர்களை நேசிப்பவர்களுக்கு...

தோப்பு ஒன்றில் பெரிய ஆப்பிள் மரம் ஒன்று நன்கு வளர்ந்து கிளை பரப்பி நின்றது. ஒரு சிறுவன் அந்த மரத்தினடியில் விளையாடிக்கொண்டிருப்பான். அந்த மரத்தின் மீது ஏறி விளையாடுவதும் அதன் கனிகளை பறித்து புசிப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். களைப்பாக இருக்கும்போது அந்த மரம் தரும் நிழலில் உறங்கி ஓய்வெடுப்பான்.

Apple tree

காலம் உருண்டோடியது. அந்தச் சிறுவன் கொஞ்சம் வளர்ந்து விட்டான். இப்போதெல்லாம் அந்த மரத்தின் நிழலில் விளையாட அவன் வருவதில்லை. ஒரு நாள் அவன் மரத்தை நாடி வந்தான். அந்த மரம் அவனை அன்போடு வரவேற்றது. “வா குழந்தாய்! வந்து என் நிழலில் விளையாடு!” அந்தச் சிறுவன் சொன்னான், “நான் இன்னும் சின்னக் குழந்தை அல்ல. மரங்களுடன் என்னால் விளையாட முடியாது. நான் விளையாடுவதற்கு விளையாட்டு பொம்மைகள் தேவை. அவற்றை வாங்க பணம் தேவை.”
அந்த மரம் சொன்னது, “என்னிடம் பணம் கிடையாது. ஆனால் நீ என்னிடமிருந்து ஆப்பிள் பழங்களை பறித்துச் சென்று அவற்றை விற்றால் உனக்கு தேவையான பணம் கிடைக்கும்.”

அந்தச் சிறுவன் அப்படியே செய்தான். பழங்களை விற்றதில் அவனுக்கு நிறைய பணம் கிடைத்தது. அதைக் கொண்டு தனக்கு பிடித்தமான விளையாட்டுப் பொருட்களை அவன் வாங்கிக் கொண்டான். ஆனால் அவன் மீண்டும் மரத்தின் பக்கம் போகவில்லை. மரம் மீண்டும் தனிமையில் விடப்பட்டது.
சில ஆண்டுகள் கழித்து ஒரு இளைஞன் அந்த மரத்தை நோக்கி வந்தான். அந்தச் சிறுவன் தான் இப்போது வளர்ந்து இளைஞனாக இருக்கிறான். அந்த மரம் அவனை அடையாளம் கண்டு கொண்டது. “வா மகனே! ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்? வந்து என் நிழலில் கொஞ்ச நேரம் உட்கார். இவ்வளவு நாட்களாக உன்னைக் காணாமல் நான் ஏங்கிப் போயிருக்கிறேன்” என்று அவனை அழைத்தது.

அந்த இளைஞனோ சலித்துக் கொண்டான், “எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. என் குடும்பத்திற்காக நான் உழைக்கிறேன். அவர்களுக்காக நான் ஒரு வீடு கட்ட வேண்டும். அதற்கு எனக்கு பணம் தேவைப்படுகிறது.”
அந்த மரம் சொன்னது, “கவலையை விடு மகனே! இப்போதும் என்னிடம் பணமில்லை. ஆனால், நீ எனது கிளைகளை வெட்டி உனது வீட்டை கட்டிக் கொள்ளலாம்.” அந்த இளைஞன் சந்தோஷமாக அந்த மரத்தின் கிளைகளையும் நடுப்பகுதியையும் வெட்டி எடுத்துச் சென்று தனது குடும்பத்திற்காக வீடு கட்டிக்கொண்டான். அடிப்பகுதி மட்டுமே மிச்சமிருந்த அந்த மரம் மீண்டும் தனிமையிலாழ்ந்தது.

நீண்ட காலம் கழித்து அந்த இளைஞன் மீண்டும் அந்த மரத்தை நாடி வந்தான். இப்போது அவன் இளைஞனல்ல. மூப்படைந்திருந்த அவன் மிக களைப்படைந்தவனாகவும் சோகமானவனாகவும் இருந்தான். மரம் அவனிடம் கேட்டது, “மகனே, ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்? என் உதவி எதுவும் உனக்கு தேவையா? ஆனால், உனக்கு உதவ என்னிடம் இப்போது ஆப்பிள்களும் இல்லை, கிளைகளும் இல்லை. உனக்கு ஆறுதலாக நிழல் கொடுக்கக்கூட முடியாத நிலையில் நான் இருக்கிறேன்.”
அந்த மனிதன் விரக்தியாக சொன்னான், “எனக்கு வாழ்க்கையே வெறுப்பாகி விட்டது. நான் மிக களைத்து விட்டேன். தனியானவனாகவும் ஆகிவிட்டேன். எனக்கு உன் ஆறுதல் மொழிகள் தேவை. உனது வேரில் நான் அமர்ந்து கொள்ளலாமா?”
மரம் ஒன்றும் சொல்லவில்லை. அந்த மனிதன் அங்கு அமர்ந்து கொண்டான். தனிமையாக இருந்த இருவரும், ஒருவர் மற்றவருக்கு துணை என்ற எண்ணத்தில் மகிழ்வடைந்தார்கள். தங்கள் நிலையை எண்ணி அவர்களுக்கு அழுகையும் வந்தது.

இந்த கதையை படிக்கும் நாம் அந்த சிறுவன் எத்தகைய கொடூரமான சுயநலவாதியாக இருந்திருக்கிறான் என அவன் மேல் கோபமடைவோம். கொஞ்சம் பொறுங்கள்! ஒருவகையில் நாம் அனைவருமே அந்த சிறுவனைப்போலத்தான் நடந்து கொள்கிறோம், நமது பெற்றோர்களை பொறுத்த வரையில்!

மரம் என உருவகமாக சொல்லப்பட்டது நமது பெற்றோர்களைத்தான் என கொண்டு சற்று யோசனை செய்து பாருங்கள்!
நாம் சிறுவயதாக இருக்கும்போது பெற்றோரின் அரவணைப்பு நமக்கு தேவைப்படுகிறது. அவர்களுடன் இருக்கும்போது நாம் மிக பாதுகாப்பாக உணர்கிறோம். நாம் வளர்ந்த பிறகு அவர்களின் நிழலில் இருப்பது நமக்கு பிடிப்பதில்லை. அவர்களை தனிமையில் விட்டு நாம் விலகிச்செல்கிறோம். அவர்களின் உதவி தேவை எனும்போது மட்டுமே நாம் திரும்ப வருகிறோம்.
அவர்களுடன் செலவழிக்க நமக்கு நேரம் கூட கிடைப்பதில்லை. ஆனால் பாசமிகு பெற்றோர் நமக்காக நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னிடம் இருக்கும் அனைத்தையும் தரத் தயாராக இருக்கிறார்கள். பதிலுக்கு அவர்கள் எதிர்பார்ப்பது என்னவோ தம் பிள்ளைகளின் பாசமும் கவனிப்பும்தான். இதை நாம் சரியாக உணர்ந்து கொண்டிருக்கிறோமா?

உங்கள் பெற்றோரை மறந்து விடாதீர்கள். முடிந்தவரை அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். உங்கள் பாசத்தையும் பரிவையும் அவர்களிடம் காட்டுங்கள். நீங்கள் சந்தோசமாக இருப்பதைப் பார்த்து தானும் சந்தோசமடையும் ஜீவன்கள் அவர்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள்.