Saturday, November 30, 2013



நட்பு என்பது ஒருவரின் ஆழ்மனத்திலிருந்து வரும் ஓர் அற்புதமான உணர்வே ஆகும். அந்த உணர்வுக்கு எல்லை என்பதே இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அப்படிப்பட்ட நட்பானது எப்படி இருக்க வேண்டுமென்று நம் வள்ளுவரே, “முகநக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு” என மிக அழகாக சொல்லியிருக்கிறார். அப்படி மனதில் இருந்து வரும் ஆழ்ந்த நட்பானது என்றுமே நிலைத்திருக்கும் என்பதை நம்மில் பலர் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கலாம்.

இப்படி நாம் ஒருவரிடத்தில் நட்பு பாராட்டும்பொழுது அதன் எல்லை எதுவரை இருக்க வேண்டும் என்பதை நிறைய பேர் விவாதிக்கவே செய்கிறார்கள். இது அவரவரைப் பொறுத்ததாகவே நான் கருதுகிறேன். ஏனெனில், என் தோழனோ தோழியோ நான் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பமாக இருக்குமாயின் அதை அடுத்தவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் எந்த கட்டாயமும் இல்லை அல்லவா? ஒரு சிலருக்கு இப்படி நட்பு என்ற பெயரில் எல்லா விவகாரங்களிலும் நண்பர்கள் தலையிடுவது பிடிக்காது.