Friday, July 10, 2009

அன்பு ...

அன்பு ஒன்றுதான் வாழ்க்கை

அர்த்தமுள்ள வார்த்தை

அறிந்தவர்கள் மிகவும் அதிகம்

அனுபவிப்பவர்கள் மிகவும் குறைவு


அன்பை விலை பேசும்

மனிதர்களின் மத்தியில்

அதிசியமாய் விலங்கினம்

பறவையினம் ஆறுதல் தரும்

ஆறரிவு அன்புக்கு பேரழிவு


அம்மா அழுதபடி

தந்தை கோபப்பட்டு

மகளுக்கும் மகனுக்கும்

அன்பினை காதல் என்று

யார் சொல்லி தந்தது

அன்பும் காதல் என

யார் அறிய மறுத்தது


கடவுளோடு கொள்ளும் அன்பும்

காரியகார அன்பு

கடைவீதியில் விற்ப்பதில்லை

கருனையுள்ள அன்பு

கவிதையில் மட்டும்

கவனம் கொள்வதில்லை

காயமில்லா அன்பு

கண்மூடி கிடந்து

இருளையே பார்க்கும்

உயிர்களுக்கெல்லாம்

வெளிச்சம் காட்டுவதுதான்

உண்மையான அன்பு.

2 comments:

Unknown said...

அன்பினை காதல் என்று
யார் சொல்லி தந்தது
அன்பும் காதல் என
யார் அறிய மறுத்தது........
nice one...

Unknown said...
This comment has been removed by the author.