Sunday, February 6, 2011

தறுதலத்துவம் : வீணாப்போகலாம் வாங்க

1) காதலில் இதயம் மூழ்கிஇருக்கும்போது,
படிப்பிலோ அல்லது வேலையிலோ கவனம்
சிதறுவது கனவு காணும் நேரத்திற்கு சமமானது.. #ஆராய்ச்சி முடிவு


2) குடிக்கும்போது மட்டும் கொலைகாரன் கூட குழந்தையா
மாறிடுரானே..அப்படினா சரக்கும் CERELAC(செரலாக்) மாதிரி தானோ # doubt


3) பிறர் ரத்தத்தை உறிஞ்சி வாழ்பவன் ரத்தம் கக்கி தான் சாவான்
- இது ஜக்கம்மா மேல சத்தியம் ( உதா : கொசு) # அனுபவம்


4) இந்த உலகத்துல அடைக்கப்பட்டு இருந்த பெரும்பாலான கதவுகளை...
இந்த ரெண்டு வார்த்தைகள் தான் திறந்திருக்கு...1 .PUSH 2 .PULL #ஆராய்ச்சி முடிவு


5) இந்த உலகத்துலையே மிகவும் விரக்தியான சிரிப்பு எப்ப வரும் தெரியுமாங்க...
எக்ஸாம் ஹால்ல உக்காந்துகிட்டு ...QUESTION பேப்பர் பார்த்துட்டு..
ஹ்ம்ம்... இந்த பேப்பரும் போச்சா...
அப்படின்னு சொல்லும்போது # சொந்தக்கதை சோகக்கதை


6)நம்மை யாரும் தொடாமலே யாரோ தொடுவது போல் இருந்தால்...
யாரும் பேசாமலே நமக்குமட்டும் யாரோ பேசுவது போல் கேட்டால்...
அருகில் இல்லாத ஒருவர் ,நமக்கு மட்டும் அருகில் இருப்பதாக தோன்றினால்...


அதுக்கு பேரு தான் SCHIZOPHRENIA ....
அது ஒரு மன வியாதி...
நெறைய சனியனுங்க அது தான் காதல்னு தப்பா புரிஞ்சிக்கிட்டு திரியுதுங்க ... #அவதானிப்பு


7) ஒரு நாள் பிரான்ஸ்ல இருக்குற ஈபிள் கோபுரத்து மேல நின்னுக்கிட்டு
ரெண்டு வெள்ளைக்காரனுங்க பேசிக்கிட்டாங்களாம்...

SEE .. WHAT A
WONDERFUL VIEW ...

நம்ம மக்க சொன்னானுங்களாம் ...
மச்சான்... இங்க இருந்து யாரு தூரமா
எச்சி துப்புறோம்னு பார்ப்பமா... #கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே


8) வாழ்க்கையில் இழந்து விட்ட கடந்த காலத்தை பற்றியும்..
வரப்போகும் எதிர் காலத்தை பற்றியும் சிந்தித்துக் கொண்டிருப்பதைவிட
நாலு கொசுவை அடிச்சாலாவது நைட்ல நிம்மதியா தூங்கலாம்.. #அனுபவம்



9) அழகான பெண்ணை அன்பாக பார்ப்பது அல்ல காதல்..
அன்பான பெண்ணை அழகாக பார்ப்பது தான் காதல்..
எனக்கு என்ன தோனுதுனா...
அட மடப்பயளுகளே... எப்படி பார்த்தாலும் ஆப்பு நிச்சயம் தானே # போதனை


10 ) நம்ம ஊரு சாலைகள்ல போறதுல...
பஞ்சர் போடாத டயரும்.. மேக்கப் போடாத பிகரும்
ரொம்ப கம்மிங்கிறது என்னோட கருத்து #அவதானிப்பு

No comments: