அவர்கள் தங்கள் பெயர்களையும் தமிழிலேயே மாற்றியிருக்கிறார்கள்..இன்று பிள்ளையார் சதுர்த்தி விசேட பூசை என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.. பிரான்சில் நான் இருக்குமிடத்திலிருந்து 250 கி.மீ தூரம் இரண்டு மணிநேரப்பயணம்..மலைப்பிரதேசத்தில் அமைதியான அடர்ந்த காட்டுப்பிரதேசத்தில் அமைந்திருந்த கோயிலுக்கு போய் வந்தது மட்டுமில்லை உங்களிற்காக சில படங்களையும் எடுத்து வந்தேன் இங்கு இணைக்கிறேன்..
கோயிலின் முகப்பு
பூசைகள் முடிந்தபின்னர் இடம்பெற்ற கலை நிகழ்வில் நடனமாடும் இரண்டு இத்தாலிய மற்றும் ஒரு தமிழ்பெண்
No comments:
Post a Comment